முகநூலில் அவதூறு பாஜக நிர்வாகி கைது
ஒட்டன்சத்திரம், மார்ச் 13 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரியம்மாபட்டியைச் சேர்ந்தவர் ஜோதி (37). பாஜக பிரமுகரான இவர் தனது முகநூல் பக்கத்தில் தி.மு.க. மற்றும் அதன் நிர்வாகிகள் பற்றி அவதூறாகப் பதிவு செய்திருந்தார். இது குறித்து ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்தில் தங்கச்சியம்மாபட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி புகார் செய்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து ஜோதி யை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.15.30 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை அமைப்பு
மதுரை, மார்ச் 13- மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15.30 லட்சம் செலவில் மாநகராட்சி 23-ஆவது வார்டு தியாகி பாலு-2 வது தெருவில் புதிதாக பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி தொடங்க உள்ளது. இதற்கான பூமிபூஜை வடக்கு மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி தலைமையில் திங்களன்று நடைபெற்றது. மாமன்ற உறுப்பினர் டி.குமர வேல், மாநகராட்சி இணை ஆணையாளர் வரலெட்சுமி, உதவிச் செயற்பொறியாளர் காமராஜ், திமுக வட்டச் செயலாளர் பவுன்ராஜ், பகுதிச் செயலாளர் குரும்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு செய லாளர் வி. கோட்டைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக்கை அகற்ற வலியுறுத்தி மதுரை அருகே மறியல்
மதுரை, மார்ச் 13- மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கேசம்பட்டி ஊரா ட்சிக்கு உட்பட்ட சாணிப்பட்டியில் மேலூர்-நத்தம் சாலை யின் பிரதான பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வருவோர் மதுக் குடித்து விட்டு போதை யில் சாலையில் விழுந்து கிடப்ப தும், சிலர் தகராறில் ஈடு படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே சாணிப் பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி திங்களன்று காலை சாணிப்பட்டி, கேசம்பட்டி, அருக்கம் பட்டி, கடுமிட்டான் பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். பின் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் கேட்டு சாலை மறியல்
மதுரை, மார்ச் 13- மதுரை மாவட்டம் தேனூர் கிராமம் 3-ஆவது வார்டான கல்லாங்குத்து பகுதிக்குக்கு கடந்த சில நாட்களாக குடி நீர் சீராக வழங்கவில்லையென வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்களன்று தேனூர் பேருந்து நிறுத்தம் முன்பு திரண்டர். பின் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சோழவந்தான்- தேனூர் சாலையில் மறியலில் ஈடு பட்டனர்.
கிணறு வெட்டும்போது வெடி வெடித்து தொழிலாளி பலி
ஒட்டன்சத்திரம், மார்ச் 13- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடபருத்தியூர் கிராமத்தில் செல்லத்துரை என்பவ ருக்குச் சொந்தமான கிணற்றை வெட்டும் பணியில் தொழி லாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது கிணற்றிற்குள் பாறையை வெடிவைத்து தகர்த்தபோது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மணி (48) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானர். கீரனூர் காவல்துறையினர் விசாரித்தனர்.
ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் தண்ணீர்தொட்டி கட்டும் பணி தொடக்கம்
சின்னாளபட்டி, மார்ச் 13- திண்டுக்கல் மாவட்டம் ஆலமரத்துப்பட்டி ஊராட்சி யில் மனைப்பிரிவு அனுமதி கட்டணத்திற்கான நிதி ரூ. 15லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளவு உள்ள தரைத்தள தண்ணீர் தொட்டி கட்டும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. ஒன்றியப் பெருந்தலைவர் மகேஸ்வரி, ஆலமரத்துப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் ஆறுமுகம், ஊராட்சி மன்ற செயலாளர் பாலதண்டாயுதபானி மற்றும் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பள்ளிச் சுவற்றில் எழுதப்பட்ட திருக்குறளை அழித்த இந்து மக்கள் கட்சி
திண்டுக்கல், மார்ச் 13- திண்டுக்கல் மாநகராட்சி பள்ளிச் சுவற்றில் எழுதப் பட்டிருந்த திருக்குறளை அழித்துவிட்டு இந்து மக்கள் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்தது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் திண்டுக்கல் ஆட்சியரிடம் திங்க ளன்று புகார் கொடுத்தனர். அமைப்பின் மாவட்டத்தலை வர் முகேஷ் கொடுத்துள்ள புகாரில், “ திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளி யின் சுற்றுச்சுவரில் உலகப் பொதுமறையான திருக் குறளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எழு தப்பட்டு இருந்தது. திருக்குறள்களை அழித்துவிட்டு அதன் மீது இந்து மக்கள் கட்சியினர் தங்களது மாநாடு தொடர் பான விளம்பரத்தை எழுதியுள்ளனர். பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையில் அரசுப் பள்ளிச் சுவரில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் கடந்து செம் மொழி தமிழின் உயர் சிறப்பான திருக்குறளை அவம தித்துள்ளனர். மேட்டுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் அனுமதியின்றி, பொதுச்சொத்தை சேதப் படுத்தும் வகையில் சுவர் விளம்பரம் செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மீண்டும் அங்கே திருக் குறளை எழுத வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
காலமானார்
பழனி, மார்ச் 13- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் சோ.முத்துமாணிக்கம் மருமகனும், மலர்விழியின் கண வருமான செந்தில்குமார் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி திங்கள்கிழமை கோயம்புத் தூர்-மருதமலைச் சாலையில் உள்ள ஸ்ரி தக்ஷா சகார்ஸ் குடியிருப்பில் நடைபெற்றது.
சிவகாசியில் 28 பவுன் நகை மாயம்
சிவகாசி, மார்ச் 13- சிவகாசி சித்துராஜபுரம் கீழுரைச் சேர்ந்தவர் ராஜா ம்(58). இவர் பீரோவில் இருந்த தங்கச் சங்கிலியை மக ளுக்குப் போட்டு விட்டு, மீண்டும் அங்கே வைத்துள்ளார். பின்பு, வீட்டில் உள்ள அனைவரும் வெளியூர் சென்று விட்டுத் திரும்பியுள்ளனர். வீட்டிலிருந்த பீரோவைத் திறந்து பார்த்தபோது, அதிலிருந்த சுமார் 28 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் மாயமானது தெரிய வந்தது. எனவே, இதுகுறித்து சிவகாசி நகர் காவல்துறையில் ராஜாராம் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை காவல்துறையினர் தேடி வரு கின்றனர்.
தார் சாலை அமைக்கக் கோரி மனு
நத்தம், மார்ச் 13- திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் வேம் பார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோபால்பட்டி இந்திரா நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்திரா நகருக்குச் செல்லும் மண்பாதை சேதம்மடைந்து குண்டும்-குழியுமாக உள்ளது. இப்பகுதி யில் தெரு விளக்குகளும் கிடையாது. இரவு நேரங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடி யாக தார் சாலை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ராஜேந்திரன் தலை மையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றியச் செயலாளர் வெள்ளை கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாப்பாத்தி ராஜேந்திரன் முருகன் முத்து ஆகியோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஒரே வீட்டை ஆறு பேருக்கு ஒத்திக்கு விட்டு ரூ.42 லட்சம் மோசடி
மதுரை, மார்ச் 13- மதுரை ஆனையூர் அருகே உள்ள ரோஜா மலர் தெரு வைச் சேர்ந்த ஸ்ரீ புகழ் இந்திரா (41) என்பவருக்குச் சொந்த மான வீடு உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீ புகழ் இந்திரா தனது வீட்டை ரூ.7 லட்சத்துக்கு ஒத்திக்கு விடுவதாக ஓஎல்எக்ஸ் செயலி மூலம் விளம்பரம் செய்துள்ளார். தரகர்கள் மூல மாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த வீட்டுக்கு மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ப வர் ரூ.7 லட்சம், கூடல்புதுரைச் சேர்ந்த பாலமுருகன் ரூ.7 லட்சம், மதுரை ஆவின் நகரைச் சேர்ந்த புவனேஸ்வரி ரூ.7 லட்சம், அரசரடியைச் சேர்ந்த சரோஜா ரூ.7 லட்சம் என 6 பேரிடமும் ரூ.42 லட்சத்தை பெற்றுக்கொண்டு வீட்டை கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். தரகர்கள் மூலமும் சிலரிடம் பணம் பெற்றிருப்பதாகக் கூறப்படு கிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நான்கு பேர் அளித்தப்புகாரின் பேரில் கூடல்புதூர் காவல்துறையினர் ஸ்ரீபுகழ் இந்திரா, அவரது மனைவி ரேணுகா, கணேச பாண்டி, ஸ்ரீபுகழ் இந்திராவின் தாய் ராஜேஸ்வரி, மகன் சபுமாரிஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து ஸ்ரீபுகழ் இந்திராவை கைது செய்தனர்.
மதுரையில் சிக்கியது 88 கிலோ கஞ்சா
மதுரை, மார்ச் 13- மதுரை வைகை வடகரைச்சாலை வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக மதிச்சியம் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் காவல்துறையினர் ஞாயி றன்று வைகை வடகரைச்சாலை ஆசாரித்தோப்பு பகுதி யில் ஒரு வாகனத்தில் வந்தவரை தடுத்து நிறுத்தி விசா ரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதையடுத்து அவர் வைத்திருந்த மூட்டையை சோதனையிட்டுள்ளனர். அதில் 88 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலை இந்திரா நகர் முருக பவ னத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகன் கார்த்தி(33) என்பது தெரியவந்தது. கஞ்சாவைக் கைப்பற்றி கார்த்தியை கைது செய்தனர்.
நகை, பணம் மாயம்
காரியாபட்டி, மார்ச் 13- கல்குறிச்சியில் பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரம் திருடு போனது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி பாரதி நகரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி பாண்டிச்செல்வி (34). இவர் காரியாபட்டி யில் எலெக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல கடைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்பு, பீரோவைத் திறந்து அதில் வைக்கப் பட்டிருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் நான்கு பவுன் தங்க நகைகளைக் காணவில்லையாம். பாண்டிச்செல்வி இதுகுறித்து மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
சாமிகும்பிடுவதில் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தக்கோரி ஆட்சியரிடம் மனு
மதுரை, மார்ச் 13- கோவிலில் சாமிகும்பிடுவதில் அனைவ ருக்கும் பிரதிநிதித்துவம் என்பதை உறு திப்படுத்த வலியுறுத்தி மதுரை ஆட்சியரி டம் மனு அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா மந்திகுளம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த பிரபகரன் மதுரை ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று நடைபெற்ற குறை தீர் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா மந்திகுளம் கிராமத்தில் அருள் புரிந்து வரும் ஸ்ரீ மந்தையம்மன் சுவாமி திருக்கோவில் சாமிகும்பிடுவது கடந்த 1993-ஆம் ஆண்டோடு நின்று விட்டது. தொடர்ந்து சுவாமி கும்பிடுவது நடத்த முடியாமல் போய்விட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஜானகி ராமன், அய்யனார், முத்துகிருஷ்ணன், சுரேஷ், விஜய் ஆகியோர் தாங்கள் கிரா மத்தின் பிரதிநிதி மற்றும் பொறுப்பாளர் களாக இருந்து கண்மாய் குத்தகை விடு தல் கோவிலுக்கு உரிய வயல் ஏலம் விடு தல் போன்ற பொதுவான செயல்பாடுகள் மற்றும் கிராமக் கணக்கை நிர்வாகித்து வரு கின்றனர். இந்த வருடம் சாமி கும்பிடுவ தற்கான ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கி றது. இந்தத் தருணத்தில் மேற்கண்ட ஐந்து பிரதிநிதிகளை போல அனைத்து சாதியின ருக்கும் கிராமம் பிரதிநிதித்துவம் தர வேண்டும். இதுவரை உள்ள கிராம பொதுக் கணக்கை கிராமத்தில் பொதுவில் சமர்ப் பிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு சாமி கும்பிடுவதற்கான வேலைகளை தொடங்க வேண்டும். ஆட்சியர், மேற்கண்ட ஐந்து பிரதிநிதி களையும் நேரில் விசாரித்து உரிய நடவ டிக்கை எடுத்து சாதி ரீதியான அனைவ ருக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்து பொதுக் கணக்கை சமர்ப்பித்து பின்னர் சாமி கும்பி டும் வேலைகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதில் வருவதற்குள் மேலும் 16 தமிழக மீனவர் கைது ஒன்றிய அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை
சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்
மதுரை, மார்ச் 13- ஒன்றிய அமைச்சரின் பதில் வருவதற் குள் மேலும் 16 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது ஒன்றிய அரசின் குர லும் கருத்தும், நடவடிக்கையும் அழுத்த மானதாக இல்லை என்பதையே காட்டுவ தாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது 21.02.2023 கடிதத்திற்கு வெளி யுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 28.02.2023 தேதியிட்ட பதிலில், இலங்கை அரசின் உயர் மட்டத்தில் இந்திய அரசின் கவலையும் வன்முறை ஏற்க இயலாது என தெரிவிக் கப்பட்டுள்ளது; தூதரகம் தகவல்களை சேகரிக்கிறது. அரசு மீனவர் பாதுகாப்பிற் கான எல்லா முயற்சிகளையும் எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இக்கடிதம் வருவதற்குள்ளாக 16 தமிழக மீனவர்கள் (நாகப்பட்டினம் 12, புதுக்கோட்டை 4) கைது செய்யப்பட்டுள்ள னர். இந்நிகழ்வுகள் மூலம் ஒன்றிய அரசின் குரலும் கருத்தும், நடவடிக்கையும் அழுத்த மானதாக இல்லை என்பதையே காட்டு கிறது. ஒன்றிய அரசின் கண்துடைப்பு நட வடிக்கையை இலங்கை கடற்படை வாரந் தோறும் நிரூப்பிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.