குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்-தூர்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
மதுரை மார்ச் 25- மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மார்ச் 25 வெள்ளிக்கிழ மையன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் மரு.அனீஸ் சேகர் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் பல்வேறு கோரிக்கை களை எழுப்பி, மனுக்களை அளித் தனர். மதுரை மாவட்டத்தில் 185 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக் கப்பட்டு, தற்போது 127 நெல் கொள் முதல் நிலையங்கள் இயங்கி வரு கின்றன என்று மாவட்ட நிர்வா கத்தின் தரப்பில் அதிகாரிகள் தெரி வித்தனர். மதுரை மாவட்டம் முழுவதும் நெல் அறுவடை பணிகள் முடிந்தும் பல இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்குகின்றன என்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நெல் அறுவடை முடிந்த இடங்களில் செயல்படும் கொள் முதல் நிலையங்களை அகற்றிட வேண்டும். நெல் அறுவடை க்காக காத்திருக்கும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை தொடர்ந்து செயல்படுத்திட வேண் டும் என்று விவசாயிகள் கூறினர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பி. இளங்கோ வன் மற்றும் மாவட்ட பொருளாளர் அடக்கிவீரணன் மற்றும் விவ சாயிகள் பேசுகையில், நெல் கொள் முதல் நிலையங்களில் விவசாயி களிடம் ஒரு சிப்பத்திற்கு 60 முதல் 80 வரை கூலி என்று வாங்குவ தாக ஆட்சியரிடம் புகார் தெரிவித்த னர். இதற்கு ஆட்சியர் பதிலளிக்கை யில், எந்தவிதமான பணமும் விவ சாயிகள் தர தேவையில்லை. அதற் காகத்தான் அரசு சார்பில் ஒரு சிப்பத்திற்கு 10 ரூபாய் தரப்படு கிறது. அப்படி வாங்கினால் அது தவறு எனவும், தர மறுக்கும் விவ சாயிகளிடம் நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் எந்தவிதமான தகராறிலும் ஈடுபடக்கூடாது. மீறி நடந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் வி.பி.முருகன் ,தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காசிமாயன் மற்றும் விவசாயிகள் பேசுகையில், ஒவ் வொரு தாலுகா வாரியாக நடத்தப் படும் கூட்டங்களில் அதிகாரிகள் வருவதில்லை. மனுக்களை மட்டும் வாங்கிக் கொண்டு அனுப்பி விடு கின்றனர். சரியான முடிவு எடுப்ப தில்லை. எனவே கூட்டத்திற்கு அதி காரிகள் கட்டாயமாக வந்து விவ சாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு ஆட்சியர், தாலுகா வாரி யாக நடக்கும் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். இதன் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி னார். தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் என். பழனிச்சாமி பேசுகை யில், கொட்டாம்பட்டியில் அருக்கம் பட்டி அருகே உள்ள பெரிய அருவி அணை 1962 இல் கக்கன் காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணை தூர்வா ரப்படாமல் உள்ளது. அந்த அணை யில் இருந்து வரக்கூடிய கால்வாய் கள் அனைத்தும் தூர்ந்து போய்க் கிடக்கிறது. இதனால் கேசம்பட்டி, பட்டூர், கச்சிராயன்பட்டி, பூதமங்க லம் ஆகிய ஊர்களில் உள்ள விவ சாய நிலங்கள் சுமார் 500 ஏக்கர் பாதிப்படைந்து கிடக்கிறது. எனவே பெரிய அருவி அணை மற்றும் கால்வாய்களை தூர்வார வேண்டும். அணையின் உள்ளே தென்னை விவசாயம் செய்து வரும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அணையை பாதுகாத்து விவசாயிகள் பயன்பெறும் வகை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆய்வு செய்து உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சி யர் பதிலளித்தார். மேலும் என்.பழனிச்சாமி பேசு கையில், மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா வஞ்சி நகரம் கிராமத்தில் தவமணி என்ற விவசாயியிடம் 1998 இல் ஆதி திராவிடர் நலத்துறை சார் பில் வீட்டடி மனைக்காக அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட் டது. அந்த கையகப்படுத்தப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்திற்கு கடந்த 25 வருடமாக பணம் தராமல் இடத்தில் வீடும் கட்டாமல் தரிசாக போடப் பட்டுக் கிடக்கிறது. எனவே ஆட்சி யர் கவனத்தில் எடுத்துக் கொண்டு விவசாயிக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். பரிசீலனை செய்து விசா ரிப்பதாக ஆட்சியர் கூறினார்.
அதிக விலைக்கு உரம் விற்பனை
விவசாயிகள் சங்கத்தின் சேடப் பட்டி ஒன்றியத் தலைவர் காசி மாயன் பேசுகையில், விவசாயத் திற்கு பயன்படுத்தக்கூடிய காம்ப் ளக்ஸ், டி.ஏ.பி ஆகிய உரங்கள் கூட்டுறவு சங்கத்தில் வெளி மார்க்கெட்டில் தனியார் கடையை விட 190 ரூபாய் கூடுதலாக உள் ளது. உதாரணமாக 50 கிலோ சிப்பம் தனியார் மார்க்கெட்டில் 1200 ரூபாய் என்றால் கூட்டுறவு சங்கத்தில் 1390 ரூபாய்க்கு விற் கப்படுகிறது. இதனால் விவசாயி கள் அனைவரும் வெளிமார்க்கெட் டில் உரம் வாங்கி பயன்படுத்து கின்றனர். கூட்டுறவு சொசைட்டி மூலம் குறைந்த விலையில் உரம் கிடைக்க ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார். விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் பதிலளித்தார்.