மதுரை, டிச.27- மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தாலங்குடி ஊராட்சி ஆணைக்குளம் சுடுகாட்டிற்கு சின் டெக்ஸ் வைத்து தண்ணீர் வசதி செய்து தர வேண்டும. நாடக மேடை முன்பு பேவர் பிளாக் அமைக்க வேண்டும். சி.புதூர் ஊராட்சி தெற்குத் தெருவில் தேங்கியுள்ள சாக்கடை நீரை அகற்றி தண்ணீர் செல்ல நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும். மன்னாடிமங்களம் ஊராட்சியில் பெண் கள் கழிப்பறை கட்ட வேண்டும். காடுபட்டி ஊராட்சியில் புதிதாக கட்டிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டு மென வலியுறுத்தி திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். போராட்டத்தில் ஒன்றியச் செயலாளர் ஏ.வேல்பாண்டி, மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.கே.பொன்னுத்தாய், ஏ.புருஷோத் தமன், பி.பொன்ராஜ், ஏ.முருகையா, எஸ்.கந்தவேல், டி.சின்னச்சாமி, யு.கருப்பசாமி, சேசம்மாள், நடராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.