நத்தம், டிச.15- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்(32). இவர் கடந்த 12 ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் நத்தம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். பாப்பா பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது இருசக்கர வாகனத்திலிந்து எதிர் பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தி னர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்தார். . இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். மேலும் இறந்துபோன கார்த்திக்கின் உடல் உறுப்பு கள் தானம் செய்யப்படுவதாக கார்த்திக்கின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.