districts

img

கட்டுப்படியான விலை இல்லாததால் மாடுகளுக்கு தீவனமாகும் பீட்ரூட்

திண்டுக்கல், மார்ச் 11- எடுப்புக்கூலி, வண்டி வாடகைக்கு கூட விலை கிடைக்காததால் பீட்ரூட் மாடுகளுக்கு தீவனமாக போடப்படுகிறது. இத னால் விவசாயிகள்  வேத னையடைந்துள்ளனர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மிகப்  பெரிய காய்கறி மார்க்கெட் டாக மகாத்மா காந்தி காய்  கனி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டைச் சுற்றி யுள்ள ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், புதுச்சத்திரம், சட்டையப்ப னூர், கம்பிளிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல குக்கிராமங்க ளில் சுமார் ஆயிரம் ஏக்க ரில் தற்போது பிரதான விவ சாயமாக பீட்ரூட் விளை விக்கப்படுகிறது.  பீட்ரூட் போன்ற காய்கறிகள் மலைப்பாங்கான பகுதி களில் மட்டுமே விளைகின்  றன. தற்போது நிலப்பகுதி யிலும் இந்த பீட்ரூட் விளை விக்க முடியும் என்றும் விவ சாயிகள் நிருபித்து விளை வித்து வருகிறார்கள்.  தற்போது திண்டுக்கல் மார்க்கெட்டில்  ஊட்டி பீட்ரூட் கிலோ ரூ.30க்கு விற்கப்படுகிறது. நில பகுதி யில்  விளையும் சாதா பீட்ரூட் கிலோ ரூ.20க்கு விற்கப்படு கிறது.

பீட்ரூட் சாப்பிட்டால் ரத்த சோகை நோய் தீரும். ரத்த சிவப்பணுக்கள் உற்  பத்தியாகும் என்று கூறப்படு கிறது. ஆனால் ஊட்டி பீட்ரூட் பார்ப்பதற்கு கொஞ்சம் சிவப்பாக இருப்பதால் அந்த பீட்ரூட் சாப்பிட்டால் தான் ரத்தம் விருத்தியாகும் என்று நினைக்கிறார்கள். அதனால் திண்டுக்கல் பீட்ரூட்டுக்கு விலை குறைவு தான். வாடிக்கையாளர் களும், வியாபாரிகளும் இரண்டாம் பட்சமாக பார்ப்ப தால் சரியாக விளை போவ தில்லை. விவசாயிகளிடம் கிலோ ரூ.5க்கு கொள்முதல் செய்வதால் எடுப்புக்கூலிக் கும், வாகன வாடகைக்கும் கட்டுப்படியாகவில்லை என்று விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த பீட்ரூட்டுகளை அப்படியே விட்டுவிடுகிறார்கள். இத னால் பீட்ரூட் பெருக்கம டைந்து விடுகிறது.  பெரிய பீட்ரூட்களையும் வியாபாரிகள் கொள்முதல் செய்வதில்லை. ஒரே அள வாக உள்ள பீட்ரூட்களை தான் வாங்குவதால் கொஞ் சம் பெரிய பீட்ரூட்டுகளை விவசாயிகள் வேறு வழி யின்றி மாட்டுக்கு தீவனமாக போடுகிறார்கள். சில நேரம் வயலிலும் மேயவிடுகிறார் கள். விலை கிடைக்க வில்லை என்ற வேதனை யில்தான் விவசாயிகள் மாடு களுக்கு உணவாக தருகி றார்கள். கிட்டத்தட்ட ரூ. 2  லட்சம் வரை செலவு செய்  தும் ரூ.50 ஆயிரம் கூட லாபம் கிடைக்காத அவலம் நீடிக்கி றது. விலை கிடைக்காத நிலையில் பெரும் நஷ்  டத்தை சந்திக்கும் விவசாயி களிடம் அரசு கொள்முதல் செய்து ஓரளவு லாபம் கிடைக்க உதவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரி க்கை விடுத்துள்ளனர். (ந.நி)