திருவில்லிபுத்தூர் ,மே 20- திருவில்லிபுத்தூரில் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பாக தேனி வளர்ப்பு பயிற்சி முகாம் நடை பெற்றது. பயிற்சியில் கலந்து கொண்ட 25 விவசாயிகள் அனைவரும் தேனீ வளர்ப்பில் தொழில் முனைவோராக வரவேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் -பேராசிரியர் வீர புத்திரன் .தோட்டக்கலை துணை இயக்குனர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். தோட்டக் கலை உதவி இயக்குனர் சீனிவாசன் முன்னிலை வகித் தார். உதவிப்பேராசிரியர்கள் சுரேஷ் , ஆனந்தன் ஆகி யோர் உரையாற்றினர். பயிற்சியில் கலந்துகொண்ட விவ சாயிகள் அனைவருக்கும் நற் சான்றிதழ் மற்றும் பைகள் வழங்கப்பட்டன.