districts

img

‘பண்பலைகளில் வாசிப்பாளர் மொழியைக் கையாளுவதில் மிகுந்த கவனம் வேண்டும்’

சின்னாளபட்டி,மே 13- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிகர் நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் ‘செய்தி சேகரிப்பு, செய்தி வாசிப்பு சார்ந்த நுட்பங்கள்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மதுரை வானொலி நிலையத்தின் மேனாள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ‘சவித்ரா’ இராஜாராம் பேசுகையில்,  செய்தி வாசிப்பும் நிகழ்ச்சித் தொகுப்பும் என்னும் சான்றிதழ்  படிப்பினைத் தமிழ்த்துறை திறம்பட நடத்தி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு செய்தி சேக ரிப்பாளர் நடுநிலைத் தன்மை உடையவராகவும் உண்மை நிலையினை மக்களுக்கு வெளிப்படுத்துபவராகவும் தனித்தன்மையான செய்திகளைச் சேகரிப்பவராகவும் இருக்க வேண்டும். அதேபோல் ஒரு செய்தியை. கருத்தி னைப் பண்பலைகளில் வெளிப்படுத்தும் வாசிப்பாளர் மொழியைக் கையாளுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மொழி உச்சரிப்பில் தெளிவு. ஏற்ற இறக்கம், ஆற்றொழுக்கான நடை, கம்பீரமான குரல்வளம், பரந்துபட்ட வாசிப்பு, சூழ்நிலையைப் புரிந்துகொண்டு உடனுக்குடன் செய்தியைத் தெரிவித்தல், தெளிவு போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்துதல் வேண்டும். ஊடகத் துறைகளில் இளைஞர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. மாணவர்கள் மொழி சார்ந்த திறன்களை வளர்த்துக்கொண்டால் நிச்சயம் வாழ்வில் வெற்றிபெற முடியும்.பண்பலை வானொலிக ளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெரும்பான்மை யான மக்கள் பண்பலையை விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.  வானொலியில் இடம்பெறும் நேர்காணல், செய்தி வாசிப்பு. வானொலி நாடகம், விளம்பரங்கள், திரை  விமர்சனம் போன்ற நிகழ்ச்சிகளை செய்தி வாசிப்பும் நிகழ்ச்சித் தொகுப்பும் என்னும் சான்றிதழ்ப் படிப்பினைப் பயிலும் மாணவர்கள் குரல் வளத்துடன் நிகழ்த்திக் காட்டினர். நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஒ.முத்தையா வரவேற்றார். கெளரவ விரிவுரையாளர் முனைவர் ந.சங்கரநாராயணன் நன்றி கூறினார். தமிழ் மாணவர்கள், சிறப்பித்தனர். ஆய்வாளர்கள் முதுகலை மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.