சாத்தூர், டிச.21- சாத்தூரில் பாதாள சாக்கடைப் பணி கள் நடைபெற்று வருகிறது. எனவே, பணி களை துரிதப்படுத்துவதோடு, தோண்டப் பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும். மதுரை பேருந்து நிறுத்தம் அருகே பூட் டப்பட்ட கழிப்பிடத்தை திறக்க வேண்டும். மின் விளக்குகளை பழுது நீக்கம் செய்திட வேண்டும். தபால் நிலையத்தின் அருகே இருந்த ஆண்கள் சிறுநீர் கழிப்பிடத்தை மீண்டும் கட்டித் தர வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர்க்குழு உறுப்பினர் சீதாலட்சுமி தலைமையேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.லட்சுமி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் கே.விஜயகுமார், எஸ்.தெய்வானை, நகர் செயலாளர் பி. பெத்தராஜ், நகர்க்குழு உறுப்பினர்கள் சீனி வாசன், நாகராஜன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.