திருப்பூர், பிப்.18 - திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழிலாளியை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள சேகாம்பாளையம் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது, அவரது முகம் கல்லால் சிதைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையான வாலிபரின் ஊர், பெயர் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மாரிமுத்து (வயது 40) என்பதும், அந்தப் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த விசாரணையில் கொலையாளிகளின் அடையாளம் தெரிந்தது. அருள்புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த உதயகுமார் (25) என்ற பனியன் தொழிலாளியும் அவரது நண்பர் மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (24) ஆகிய இருவரும் அதிக மதுபோதையில் சம்பவம் நடந்த அன்று இருசக்கர வாகனத்தில் அருள்புரம் - சேகாம்பாளையம் சாலையில் சென்றுள்ளனர். அங்கு காட்டுப் பகுதியில் நின்று கொண்டிருந்த மாரிமுத்துவிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து அவர்களை தாக்க முயன்றுள்ளார். இதனால் மாரிமுத்துவை கீழே தள்ளிய உதயகுமார் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் அருகில் கிடந்த கல்லை எடுத்து சரமாரியாக தாக்கி மாரிமுத்துவின் முகத்தை சிதைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கரைப்புதூர் பகுதியில் பதுங்கியிருந்த உதயகுமாரை பல்லடம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியான மதுரையைச் சேர்ந்த கார்த்திக்கை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்., பிப்.18 - திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழிலாளியை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள சேகாம்பாளையம் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது, அவரது முகம் கல்லால் சிதைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையான வாலிபரின் ஊர், பெயர் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மாரிமுத்து (வயது 40) என்பதும், அந்தப் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த விசாரணையில் கொலையாளிகளின் அடையாளம் தெரிந்தது. அருள்புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த உதயகுமார் (25) என்ற பனியன் தொழிலாளியும் அவரது நண்பர் மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (24) ஆகிய இருவரும் அதிக மதுபோதையில் சம்பவம் நடந்த அன்று இருசக்கர வாகனத்தில் அருள்புரம் - சேகாம்பாளையம் சாலையில் சென்றுள்ளனர். அங்கு காட்டுப் பகுதியில் நின்று கொண்டிருந்த மாரிமுத்துவிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து அவர்களை தாக்க முயன்றுள்ளார். இதனால் மாரிமுத்துவை கீழே தள்ளிய உதயகுமார் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் அருகில் கிடந்த கல்லை எடுத்து சரமாரியாக தாக்கி மாரிமுத்துவின் முகத்தை சிதைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கரைப்புதூர் பகுதியில் பதுங்கியிருந்த உதயகுமாரை பல்லடம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியான மதுரையைச் சேர்ந்த கார்த்திக்கை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.