districts

img

தூத்துக்குடியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்

தூத்துக்குடி, ஜூலை 10- தூத்துக்குடியில் பக்ரீத் பண்டிகை யை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இஸ்லாமிய மக்களின் முக்கிய திருநாளில் ஒன்றான பக்ரீத் பண் டிகை ஞாயிறன்று (ஜூலை 10) நாடு  முழுவதும் உற்சாகமாக கொண்டா டப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி யில் உள்ள ஈத்கா திடலில் பக்ரீத்  பண்டிகை சிறப்பு தொழுகை நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட னர். இதுபோல் தூத்துக்குடி மாவட்  டத்தில் காயல்பட்டினம், கோவில் பட்டி, செய்துங்கநல்லூர், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வாசலில் காலை சிறப்பு தொழுகை நடை பெற்றது.