districts

img

பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் 100 அடி கூட எட்டவில்லை

திருநெல்வேலி, டிச. 15- நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காலத் தில்தான் கூடுதல் மழை கிடைத்து வருகிறது. வழக்கமாக அக்டோ பர் மாதம் 18ம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை நவம்பர், டிசம் பர் மாதங்கள் வரை நீடிக் கும். நவம்பர் மாதம் முழுவ தும் நல்ல மழை கிடைக்கும் என்பதால் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் பெரும்பாலும் நிரம்பி விடும்.  ஆனால் இந்த ஆண்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகி ழக்கு பருவமழை ஏமாற் றம் அளித்தது. டிசம்பர் மாதம் 15ம் தேதியை எட் டிய நிலையிலும் இதுவரை போதிய வடகிழக்கு பருவ மழை இல்லை. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் இதுவரை 100 அடியை கூட எட்டவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.