சவாரி ஏற்றுவதில் மோதல்: ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை
மதுரை, நவ.6- மதுரை மாநகர் எம்.கே.புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (47), நாகராஜ் (28), சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (24) ஆகியோர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களாக உள்ளனர். இவர்கள் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள மதுரை நேதாஜிரோடு பகுதியில் உள்ள ஜான்சி ராணி பூங்காவிலிருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு எல்லீஸ் நகர் மீனாட்சி அம்மன் கோவில் பார்க்கிங் பகுதியில் ஆட்களை இறக்கி விடுவது வழக்கம். இந்நிலையில் சவாரிக்கான ஆட்களை இறக்கிவிடு வதில் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டனுடன், நாகராஜ் மற்றும் சூரிய பிரகாஷ் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இது தகராறாக மாறிய நிலையில், ஆட்டோ ஓட்டுநர்களான நாகராஜ், அவரது நண்பர் சூரிய பிர காஷ் ஆகியோர் மணிகண்டனை செங்கலால் தாக்கிய தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தில கர்திடல் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற் கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து உயிரிழந்த மணிகண்டனின் மனைவி மீனா (38) அளித்த புகாரின் பேரில் திலகர்திடல் காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து மதுரை மாநகர் எம்.கே.புரத்தைச் சேர்ந்த நாகராஜ், சம்மட்டி புரம் பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இலவச பொங்கல் பொருட்களுடன் மண் அடுப்பு, பானைகளை வழங்குக! மண்பாண்ட தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு
மதுரை, நவ.6- குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பொருட்களில் மண்பாண்டத் தில் செய்யப்பட்ட புது அடுப்பு, மண்பானையை இலவச மாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சி யரிடம் திங்களன்று மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவர் மாணிக்கம், செயலாளர் கருப்பு ராஜா, பொருளாளர் மூர்த்தி ஆகியோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில், ‘‘தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பச்சை அரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட உணவு பொருட்களுடன் வேஷ்டி சேலை ஆண்டுதோறும் தமிழக அரசு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு வழங்கப்படும் பொருட்களில் மண் பாண்ட தொழிலாளர்களின் தொழிலை மேம்படுத்தும் வித மாக மண்பாண்டத்தால் செய்யப்பட்ட அடுப்பு, மண்பானையை அரசு கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும்’’ என்று கூறப் பட்டுள்ளது.
100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு
விருதுநகர், நவ.6- 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைத்துள்ள ஊதியத்தை உடனே வழங்க கோரி தேசிய வங்கிகள் முன்பு போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, விருதுநகர் மக்களவை உறுப்பி னர் ப.மாணிக்கம்தாகூர் கடிதம் எழுதி யுள்ளார். அக்கடிதத்தில், ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் வேலை செய்யும் ஏழைத் தொழிலாளர் களுக்கு தொடர்ந்து ஊதியம் கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த செப்.12 மற்றும் அக்.13-இல் கடிதங்கள் அனுப்பியிருந் தேன். ஆனாலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விருதுநகர் தொகுதியில் உள்ள கிராமங்களில் கள ஆய்வுக்கு நான் சென்ற போது, 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கடைசியாக ஆக.3இல் வழங்கியது தெரிய வந்தது. அதன் பிறகு கடந்த 14 வாரங்களாக இந்த கடின உழைப்பாளிகளுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், ஏழை கிராமப்புற தொழிலா ளர்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் சுமையை பொருளாதார நெருக்கடியை உருவாக்கி உள்ளது. இந்த வருமானத்தை மட்டும் நம்பி இருக்கும் ஏழை எளிய மக்க ளின் வாழ்க்கையை மிக மோசமாக பாதித் துள்ளது. எனவே, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு உடனே நிறுத்தி வைத்துள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை யில் ஈடுபடும் ஏழை தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படா மல் இருப்பது, இத்திட்டத்தை செயல் படுத்துவதில் சவால்களை ஏற்படுத்தி உள்ளது. எனது தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட் டத்தில் மட்டும் ரூ.82.23 கோடி ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக வும், தோராயமாக ஒரு வீட்டுக்கு ஒரு நப ருக்கு ரூ.17,500 வீதம் சம்பளம் வழங்கா மல் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த பிரச்சனையில் பிரத மர் உடனடியாக தலையிட வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் 14 வாரங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தப்படும்’’ எனக் கூறப் பட்டுள்ளது.