districts

மதுரை முக்கிய செய்திகள்

ஆட்டோ தொழிலாளர் பேரவை

இராமநாதபுரம், ஜூன் 26- இராமநாதபுரம் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்டப் பேரவை இராமநாதபுரத்தில் டைபெற்றது. மாவட்டத் தலைவர் டி..ராஜா தலைமையில் நடை பெற்ற பேரவையில் அமைப்பின் மாநிலப் பொதுச் செயலா ளர் எம்.சிவாஜி, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சந்தா னம், மாவட்டத் துணைத் தலைவர் அ.சுடலைக்காசி, மாவட்டச் செயலாளர் ஆர்.முனியசாமி, ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரவையில் மாவட்டத் தலைவராக ஆர்.முனிய சாமி, செயலாளராக வி.பாஸ்கரன், பொருளாளராக வி. ஜெயக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக டி.ராஜா, என்.பி.செந்தில், சதீஷ்குமார், கண்ணன், துணைச் செயலாளர்களாக ரமேஷ், மணிகண்டன், தில்லைநாயகம், கருப்புசாமி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கேளையாடு வேட்டையாடிய இருவர் கைது

திண்டுக்கல், ஜுன் 26- திண்டுக்கல் சிறுமலை வனப்பகுதியில் கேளையாடு வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்த னர்.  திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள கவராயபட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் கருப்பையா, மூக்கராசு. இவர்கள் சிறுமலை வனப்பகுதிக்குட்பட்ட தாழைக்கடை அடர் வனப்பகுதியில் சுற்றித்திரிவதாக மலை மக்கள் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் வன சரக அலு வலர் மதிவாணன் தலைமையில் வனக்காப்பாளர் பால கிருஷ்ணன், வனவர்கள் பாண்டி, அப்துல்ரகுமான், சர வணன், பாலகிருஷ்ணன், சங்கர், கணேஷ், அரவிந்த், ஆலப்பன் உள்ளிட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர். அப்போது அஞ்சுகுளிப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த கருப்பையா மற்றும் மூக்க ராசை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து அவர்களிட மிருந்த கேளையாட்டின் தோள், மாமிசம், கத்தி, அரிவாள், மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். கேளை ஆட்டை வேட்டையாடிய குற்றத்திற்காக இருவரையும் கைது செய்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வரிச்சியூர் செல்வத்திற்கு  ஐந்து நாள் போலீஸ் காவல்

விருதுநகர், ஜூன்.26- மதுரையைச் சேர்ந்தவர் ரவுடி வரிச்சியூர் செல்வம். இவ ரது கூட்டாளி விருதுநகரைச் சேர்ந்த செந்தில் குமார். இவரை வரிச்சியூர் செல்வத்தின் தூண்டுதலின் பேரில் அவ ரது அடியாட்கள் கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை யில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.  பின்பு, உடலை துண்டு துண்டாக வெட்டி தூத்துக்குடி அருகே உள்ள முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் வீசி னர்.  இந்த சம்பவத்தில் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை விருதுநகர் தனிப்படை காவல்துறையினர் கடந்த புத னன்று கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.  இந்த நிலையில் ரவுடி வரிச்சூர் செல்வத்தை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகர் குற்ற வியல் நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்தி ருந்தது. இந்த மனு மீதான விசாரணைக்கு வந்தது. இதற்காக நீதிமன்றத்தில் வரிச்சியூர் செல்வத்தை காவல்துறையினர் நீதிமன்றத்தில ஆஜர்படுத்தினர். மனு வை விசாரித்த நீதித்துறை நடுவர் கவிதா, வரிச்சியூர் செல்வத்தை ஐந்து நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியதோடு ஜூலை 1-ஆம் தேதி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

பக்ரீத் பண்டிகைக்கு  ஆடு வியாபாரம் அமோகம்  ஆண்டிப்பட்டியில் ரூ.2 கோடிக்கு விற்பனை

தேனி, ஜூன் 26- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆண்டிபட்டி ஆட்டு  சந்தையில் ரூ 2 கோடிக்கு ஆடு விற்பனையால் வியாபாரி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டிப்பட்டியில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை  ஆட்டு சந்தை செயல்படுகிறது. இந்தச் சந்தையில் தேனி,  ஆண்டிபட்டி, கம்பம், பெரியகுளம், உசிலம்பட்டி, வத்த லக்குண்டு பகுதிகளைச் சேர்ந்த கால்நடை வளர்ப்ப வர்கள் பங்கேற்று ஆடுகளை விற்பனை செய்வார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரி கள் இந்தச் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கிச் செல்வர்.  வருகிற 29-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டா டப்படும் நிலையில், திங்களன்று ஆண்டிபட்டி ஆட்டு சந்தையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்ப னைக்கு வந்தது. ஆடுகளின் எடையை பொறுத்து ரூ.6 ஆயி ரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. திங்களன்று ஆண்டிபட்டி ஆட்டுச் சந்தை யில் ரூ.2 கோடி வரையிலான ஆடுகள் விற்பனை நடை பெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பணம் கேட்டு மிரட்டல் கல்குவாரிகள், கிரஷர்கள் வேலைநிறுத்தம்

தேனி, ஜூன் 26- அரசு அதிகாரிகள், சமூக விரோதிகள் பணம் கேட்டு  மிரட்டுவதாகக் கூறி கல் குவாரி ,கிரஷர் உரிமையா ளர்கள் வேலைநிறுத்தம் செய்ததால் ரூ.3 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது . சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சமூக விரோதி கள் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். அதிகாரிகள் மிரட்டு கின்றனர். தமிழக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கும் விதிமுறைகளை, சிறிய அளவிலான கல்குவா ரிகள் நடத்துபவர்களுக்கும் விதிக்கிறது எனக் கூறி தமி ழக கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் சங்கம் சார்பில்  திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.  தேனி மாவட்டத்தில் செயல்படும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கிரஷர்கள் மூடப்பட்டது. அனைத்து கல்குவாரிகள், கிரஷர்கள் மூடப்பட்டன. இத னால் தேனி மாவட்டத்தில் மட்டும் தினமும் ரூ.3 கோடி அள விலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கல்குவாரிகளை நம்பி பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்குவாரிகள் மற்றும் கிர ஷர்கள் மூடப்பட்டுள்ளதால் தேனி மாவட்டத்தில் விவசா யத்திற்கு அடுத்தபடியாக நடைபெறும் கட்டுமான தொழில் அடியோடு பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

பி.தொட்டியான்குளம் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்

விருதுநகர், ஜூன் 26- விருதுநகர் மாவட்டம் பி.தொட்டியான் குளத்தில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டுமென மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில், “திருச்சுழி அருகே உள்ளது புலிக்குறிச்சி ஊராட்சி. இங்குள்ள தொட்டியான்குளத்தில் 800 குடி யிருப்புகள் உள்ளன. இதன் அருகிலேயே அரசு மது பானக் கடை உள்ளது. இங்கு ஆண்கள் சென்று மது குடித்து வருவதால் நாள்தோறும் சண்டை சச்சரவுகள் நடக்கின்றன. பள்ளி மாணவர்களும் குடி போதைக்கு அடிமையாகி வருகின்றனர். மதுஅருந்தி ஏராளமானோர் இறந்து விட்டதால் இளம் விதவைகள் எண்ணக்கை அதி கரித்து வருகிறது. எனவே, தொட்டியான்குளத்தில் உள்ள  மதுபானக் கடையை அகற்ற வேண்டுமென தெரிவித் துள்ளனர்.

டெங்கு ஒழிப்புப் பணியாளர்களுக்கு பி.எப் வழங்காத சிவகாசி மாநகராட்சி

விருதுநகர், ஜூன்.26- சிவகாசி மாநகராட்சி பி.எப் பணம் வழங்கவில்லை யென டெங்கு ஒழிப்புப் பணியாளர்கள் விருதுநகர் ஆட்சி யரிடம் புகாரளித்தனர். மனுவில், “சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் மண்டலத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் டெங்கு ஒழிப்புப் பணியா ளர்களாக பணி புரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கு பி.எப் பணம் வழங்கவில்லை. அதற்கான எண்ணும் தர வில்லை. ரூ.428 தினக் கூலிக்குப் பதிலாக வெறும் ரூ.208 மட்டுமே வழங்கப்பட்டது. மூன்று மாதங்களாக சம்பள மும் வழங்கவில்லை. ஊதியம்- பி.எப் தொகை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆவியூர் கிராமக் கோவிலில் பட்டியலினத்தவரை அனுமதிக்கக் கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

மதுரை, ஜூன் 26-   விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கிராமத்தில் உள்ள செல்லாயி அம்மன், அய்யனார் கோவில் திருவிழாக்களில் பட்டியலின சமூகத்தினர் வழிபாடு நடத்த அனுமதி வழங்கக்கோரிய வழக்கில் விருதுநகர் ஆட்சியர், மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருத்தார் அதில் “ விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆவியூர் கிராமத்தில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெற்குத் தெருவில் 300-க்கும் மேற்பட்ட பட்டியல்  இனத்த சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர் ஆவியூர் கிராமத்தில்  அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவான செல்லாயி அம்மன் கோவில்,  ஈஸ்வரன் கோவில் மற்றும் அய்யனார் கோவில்கள் உள்ளன. இந்தக் கோவிலுக்குள் செல்வதற்கும் திருவிழாக்களின் போது முளைப்பாரி எடுத்தல், வேல் குத்துதல்,  வரி வசூல் செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.  எங்கள் பகுதியில் உள்ள டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவகத்தில் அமர்ந்து உணவு உட்கொள்வதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. முடி திருத்தம் செய்வதற்கும் அனுமதிக்காமல் தீண்டாமைச் செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கிராமத்தில் அனைத்துச் சமுதாய மக்களும் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி வழங்க வேண்டும். தீண்டாமைச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி  அமர்வில் திங்களன்று  விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் விருதுநகர் காவல் துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

தொடர் போராட்டத்தால் கிடைத்தது கணிக்கர் மக்களுக்கு சாதிச் சான்றிதழ்

பரமக்குடி, ஜூன் 26- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யில் கணிக்கர் பழங்குடியின மக்களுக்கு முதன் முறையாக சாதிச் சான்றிதழ் கிடைத்  துள்ளது. கணிக்கர் சமூக மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டுமென பல  ஆண்டுகாலமாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கம் ஆகியவை தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் பரமக்குடி உதவி ஆட்சியர் முன் முயற்சியால் மானுடவியல் துறையினர் ஆய்வு நடத்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறை பகுதி யில் வசிக்கும் 11குடும்பங்கள், சத்திரக்குடி  தீயனூர் குரூப் வெற்றி நகரில் 60 குடும்பங்  களுக்கு கணிக்கர் சமூக சான்றிதழ்கள் கிடைத்துள்ளன.  திங்களன்று பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் பரமக்குடி படித்துறை மக்களுக்கு சாதி சான்றிதழ்  வழங்கினார். நிகழ்வில் அரசு அதிகாரி கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தாலுகா செயலாளர் தி.இராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் தட்சிணா மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

மா விவசாயிகள் போராட்டம்

திண்டுக்கல், ஜுன் 26- கட்டுப்படியான விலை கேட்டு திண்டுக்கல் ஆட்சி யரிடம் மா விவசாயிகள் திங்களன்று மனுக்கொடுக் கும் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  திண்டுக்கல் மாவட்டத்  தில் ஆத்தூர், அய்யம் பாளையம், பழனி, ஆயக் குடி, நத்தம், கோபால்பட்டி, சித்தரேவு, மருதாநதி அணை, கோம்பை, நெல் லூர், பட்டிவீரன்பட்டி, தேவ ரப்பன்பட்டி, கணக்கன் பட்டி, மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவா ரம், புனல் காடுகள், சித்தை யன்கோட்டை நரசிங்க புரம் பகுதிகளில் ஆறாயி ரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மா விவசாயம் நடைபெறு கிறது. ஒரு டன்னுக்கு ரூ.20  ஆயிரம் வரை செலவாகி றது. கடந்தாண்டு டன் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை விற்ற மாங்காய். இந்த ஆண்டு டன் ரூ.7 ஆயிரம்  முதல் ரூ.14 ஆயிரம் வரை  விற்பனையாகிறது. இதை யடுத்து மா விவசாயத்திற் குக் கட்டுப்படியான விலை  கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குளிர்பத னக் கிட்டங்கி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி திண்டுக்கல் ஆட்சிய ரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாகவும், மா விவசாயிகள் மனு அளித்தனர்.