உதவி வருவாய் அலுவலர் விளக்கம் திண்டுக்கல், அக்.1- திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கட்டிமுடிக்கப் பட்டு ஏலம் விடப்பட்ட 34 கடைகள் குறித்து வியாழ னன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பாஜக கவுன் சிலர் தனபால் எழுப்பிய கேள்விகளுக்கு உதவி வரு வாய் அலுவலர் சாரங்க சரவணன் பதில் அளித்தார். திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக பேருந்து நிலை யத்தில் கட்டப்பட்ட கடைகள் ஏலம் விடப்பட்டது தொடர் பாக முறைகேடு என்றும், அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நகர் முழுக்க மாமன்றத்திற்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டினார் பாஜக கவுன்சிலர் தனபால். வியாழனன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்திலும் தனபால் பேசும் போது வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பிரச்சனையை எழுப்பினார். இதற்கு உதவி வருவாய் அலுவலர் சாரங்க சர வணன் பதிலளிக்கையில், பேருந்து நிலைய கடை கள் ஏலம் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டும் நீதி மன்ற வழிகாட்டுதல் படியும் நடந்தது. ஏல நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கவுன்சிலர் புகார் கூறும் ஏலதாரர் அரசு நிர்ணயித்த தொகையை விட குறைவாக கேட்டார். அதனால் அவ ருக்கு கடை வழங்கப்படவில்லை. ஒரு கடைக்கு ரூ.18 ஆயிரத்திற்கு மேல் ஏலம் கேட்கப்பட வேண்டும். ரூ.18,100 என்று கேட்டிருந்தால் கூட பரிசீலிக்கலாம். ஆனால் சம்மந்தப்பட்ட ஏலதாரர் ரூ.16 ஆயிரத்திற்கு கேட்டார். மேலும் அந்த ஏலதாரர் நீதிமன்றம் சென்றுள்ளார். அவர் கேட்ட ஏலத் தொகைக்கு கடை ஒதுக்க இயலாத நிலை. அவரது டெபாசிட் தொகையை அப்போதே வேண்டும் என்று எழுதிக் கேட்டிருந்தால் தந்திருப்போம். இப்போதும் நாங்கள் தரமாட்டோம் என்று சொல்லவில்லை. இதுவரை அவர் எழுதி கேட்கவில்லை என்று சாரங்க சரவணன் பதிலளித்தார். அப்போதும் திருப்தியடையாத பாஜக கவுன்சிலர் தன பால் வெள்ளை அறிக்கை கேட்டதையடுத்து திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். (நநி)