ஒட்டன்சத்திரம், ஏப்.12- ஒட்டன்சத்திரம் பகுதியில் கத்திரிக்காய் அமோகமாக விளைச்சல் அடைந்துள்ள நிலையில் விலை வீழ்ச்சியால் விவசாயி கள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, மாம் பாறை, புல்லாகவுண்டனூர், கள்ளிமந்தை யம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிரா மப்பகுதிகளில் ஏரளமான விவசாயிகள் கத்திரிக்காய் பயிரிட்டுள்ளனர். தற்போது நன்கு விளைச்சல் அடைந் துள்ள நிலையில் விவசாயிகள், கத்தி ரிக்காயை அறுவடை செய்து ஒட்டன்சத்தி ரம் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று வியாபாரிகளிடம் விற்பனை செய்து வரு கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ. 50 வரை விற்றது. தற்போது ஒரு கிலோ தரத்திற்கேற்ற வகையில் ரூ 10 முதல் ரூ 15 வரை விற்பனையாகி வரு கிறது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயி கள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து கப்பல்பட்டியைச் சேர்ந்த விவசாயி சிதம்பரம் என்பவர் கூறுகையில், மழைக்காலங்களில் வரத்து குறைவாக இருக்கும்போது கத்திரிக்காய் அதிக விலைக்கு விற்பனையாகும். தற்போது அதிக விளைச்சல் ஏற்பட்டுள்ளதால் மிகக்குறைந்த விலைக்கு வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. சில நேரங்களில் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றால் அதிக வரத்தால் வாங்க மறுப்பதால் கத்தி ரிக்காய் வீணாகிறது. இதனால் அக்கம் பக்கத்தினருக்கு இல வசமாக வழங்கி வருகிறோம். கத்தரிச்செடி நடவு செய்தது முதல் தண்ணீர் பாய்ச்சியது, களை எடுத்தது, காய் அறுவடை செய்த கூலி ஆகியவற்றை கணக்கு பார்த்தால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் எங்க ளுக்கு கவலையாக உள்ளது என்று தெரி வித்தார்.