தேனி, மார்ச் 5- தேவாரம் அருகே கூலித் தொழிலாளி யை அரிவாள், கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்று, மோட்டார் பைக்கை திரு டிச் சென்ற 4 பேர் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்த போலீஸார் பள்ளி மாண வன் உள்பட 2 பேரை கைது செய்தனர். தேனி மாவட்டம், தேவாரம் அருகே கிருஷ்ணன்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் வெங்கடேசன் (35). இவருக்கும் கோம்பையை சேர்ந்த ராமசாமி மகன் ரகுநாத் என்பவருக்கும் இடையே செல்போன் வாங்கியது தொடர்பாக முன்பகை இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்து சனிக்கிழமை இரவு லட்சுமி நாயக்கன்பட்டி அருகே வந்த வெங்கடே சனை வழிமறித்து மேற்படி ரகுநாத், கோம்பை அரண்மனை தெருவை சேர்ந்த பாண்டியராஜ் மகன் கோகுல் (18), இதே ஊரைச் சேர்ந்த 15 வயதுள்ள 10 ஆம் வகுப்பு மாணவன், தேவாரத்தை சேர்ந்த முருகன் மகன் ஜோதி (27) ஆகியோர் சேர்ந்து கத்தி, அரிவாளால் குத்தியும், வெட்டியும் கொலை செய்ய முயன்றுள்ளனர். வெங்க டேசன் ஓட்டி வந்த மோட்டார் பைக்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வெங்க டேசன் தீவிர சிகிச்சைக்காக க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வெங்கடேசனின் தந்தை கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீ ஸார் வழக்கு பதிவு செய்து கோகுல் மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.