districts

img

கோவில் நிலத்தை அபகரிக்க முயற்சி அன்னசாகரம் மக்கள் ஆட்சியரிடம் புகார்

தருமபுரி, டிச.19- அன்னசாகரத்தில் கோவில் நிலத்தை அபகரிக்க முயற்சி  செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதி பொதுமக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர். தருமபுரி நகராட்சி, அன்னசாகரம் பகுதியில் சுப்பிர மணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமாக விருமாண்டிபுரம் கிராம புல எண்: 177/1, 177/2, 179/1, 179/2, 180/1 ஆகிய  சர்வே எண்களில் பல தலைமுறைகளாக 300க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் அனை வரும் ஏழை, எளிய, தினக்கூலி வேலை செய்து வருப வர்கள்.  இந்நிலையில், இதேபகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் போலி ஆவணம் தயார் செய்து, மேற்கண்ட நிலத்தை அபக ரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனை தடுத்து போலி பட்டா தயாரிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்தி அன்னசாகரம் பகுதி மக்கள் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், நாங் கள் நீண்ட காலம் கோயில் நிலத்தில் வீடுகட்டி குடியிருந்து வரு கிறோம். இந்நிலையில், அன்னசாகரத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி, அறநிலையத் துறை அதிகாரிகளின் உதவியோடு நாங்கள் வசிக்கும் இடத்தை அவரது பெயரில் மாற்றி, பட்டா வாங்க முயற்சி  செய்து வருகிறார். இதனை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண் டும். கோவில் நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபடும் அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட  ஆண்டுகாலமாக கோவில் மானிய நிலத்தில் குடியிருப்போ ருக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும், என்றனர்.