தேனி, ஏப்.15- பெரியகுளத்தில் அண்ணல் அம்பேத்க ரின் 132 வது பிறந்த நாள் விழாவில் மாலை அணிவிப்பதில் ஏற்பட்ட தகராறு பெரும் கலவரமாக மாறியது. காவலர்கள் மீதும், காவல் நிலையம் மீதும் தாக்குதல் நடத் தப்பட்டது. பேருந்து காவல் ஆய்வாளர், 108 ஆம்புலன்ஸ் ஆகிய கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் பொதுப்போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. கலவரத்தில் ஈடு பட்ட 70 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பெரியகுளத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளிக் கிழமை காலை முதல் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். இந்நிலையில், கடைசி நிகழ்ச்சி யாக பட்டாளம்மன் கோவில் தெரு இளை ஞர்களும் தெ,கல்லுப்பட்டி இளைஞர் களும் அக்கினி சட்டி மற்றும் மேளதாளங் களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்தனர். அப்பொழுது திடீரென இரண்டு கோஷ்டிகளுக்கும் யார் முதலில் செல்வது என்று தகராறு ஏற் பட்டு அடிதடியாக மாறியது. இதில் சேர் மற்றும் இருசக்கர வாகனங்களை விழா விற்கு வந்திருந்த இளைஞர்கள் அடித்து நொறுக்கினர். தனியாரின் 2 இரு சக்கர வாக னங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் மோதலை தடுக்க வந்த காவல் துறையிரை மோதலில் ஈடுபட்ட இளை ஞர்கள் விரட்டினார்கள். இதில் காவல் நிலையத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி காவல் நிலையத்திற்குள் கல் வீச்சு வீசி தாக்கினர். இதில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆய்வாளர் வாக னம், 108 வாகனம், பேருந்து கண்ணாடிகள் உடைத்து, மேலும் 15க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனம் உடைத்தன. இதில் காவல் துறை ஆய்வாளர் மீனாட்சி உட்பட 13 காவல்துறையினருக்கு கல் எறிந்ததில் காயம் ஏற்பட்டது.
மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே நேரில் வந்து கலவரத்தில் ஈடு பட்டவர்களை கைது செய்தனர். இதனால் பெரியகுளத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பெரியகுளத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. போலீ சார் குவிக்கப்பட்டு பெரியகுளம் பகுதி யில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சந்தே கப்படும்படியாக சுற்றும் நபர்களை கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்ற னர். மேலும் கலவரம் ஏற்பட்ட பகுதியை பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து, பெரிய குளம் வட்டாட்சியர் காதர் ஷரிப் ஆகி யோர் ஆய்வு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். போக்குவரத்து நக ருக்குள் தடை செய்யப்பட்டு புறவழிச் சாலை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. 70 பேர் கைது காவல்துறையினர் மீதும் காவல் நிலையத்தின் மீதும் கல் எறிந்து தாக்குதல் நடத்தியவர்களை இதுவரையில் 70 நபர்கள் கைது செய்யப்பட்டனர் மேலும் கலவரத்தில் ஈடுபட்ட நபர் களை தொடர்ந்து காவல்துறையினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், திண்டுக்கல் சரக டி ஐஜி அபினவ் குமார் மற்றும் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் சம்பவ இடத்தில் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சனிக்கிழமை மாலை முதல் இயல்பு நிலைக்கு திரும்பி யது.