சின்னாளப்பட்டி நவ.19- திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியக்குழு கூட்டம், செம்பட்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன் முன்னிலை வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலையான் வரவேற்றார். கவுன்சிலர் நாகவள்ளி பேசுகையில், காந்திகிராம ஊராட்சி, பாண்டியன் நகரில், கடந்த பல நாட்களாக விபத்து ஏற்படும் வகையில் உள்ள கிணறுக்கு தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்றார். அதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலை யான் பதிலளித்தார். பாப்பாத்தி பேசுகையில், பாளையங்கோட்டை ஊராட்சி 1-வது வார்டில் குடிதண்ணீர் பிரச்சனை உள்ளது. இதனை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாளையங்கோட்டையில் உள்ள சுடுகாட்டி ற்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு முறை கவுன்சிலர் கூட்டத்தில் கவுன் சிலர்கள் பேச்சுக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என ஆவேசமாக பேசினார். ஒன்றிய கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலையான் கூறினார்.