விருதுநகர், ஏப்.17- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் தெய்வேந்திரிபுரி ஊராட்சியில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டுமென மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவில், “திருவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சியில் ஊரணிக்கரை தெருவில் உள்ள அரசுபுறம்போக்கில் தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த 20 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள கால்வாய் உபரி நீர் கால்வாயின் ஒரு பகுதி என தவறாக கூறி பொதுப்பணித்துறை குடியிருப்புகளை அகற்ற முடிவு செய்துள்ளது. எனவே, அங்கு குடியிருக்கும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.