ஒட்டன்சத்திரம், ஜன.1- ஒட்டன்சத்திரத்தில் ரயில்வே பாலத்தில் பலநாட்களாக தேங்கிக்கிடக்கும் மழை நீரால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்தி ரத்தில் காந்திநகர், வினோபாநகர், விஸ்வ நாதநகர், சாஸ்தாநகர், திடீர்நகர் உள்ளிட்ட பகுதிக்கு செல்வதற்கு தனியார் மெட்ரிக்கு லேசன் பள்ளியின் மேற்கு பகுதியில் திண் டுக்கல் - பழனி ரயில் பாதையை கடந்து செல்லும் வகையில் தார்ச்சாலை உள்ளது. இப்பகுதியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்த ரயில்வே பாதையில் தினந் தோறும் 10 க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருவதால் ரயில்வே கேட் பூட்டப்படுவ தால் பொதுமக்கள் பல மணி நேரம் காத்தி ருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் ரயில்வே துறையின் சார்பில் சாஸ்தாநகரை அடுத்து பல லட்சம் செலவில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக் கப்பட்டது. கடந்த மாதம் மழை பெய்தபோது மழை நீருடன் கழிவுநீர் கலந்து ரயில்வே சுரங்கப் பாதையில் குளம்போல தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ்.சிவமணி கூறு கையில், ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீரும், கழிவுநீரும் கலந்து பெரிய குளம் போல தேங்கி நிற்பதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அது போல கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி அனைவரையும் கடிப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒட்டன்சத்திரம் நகராட்சி நிர்வாகம் உடன் தலையிட்டு சுரங்கப்பாதையில் தேங்கியுயுள்ள மழைநீரையும், கழிவுநீரை யும் முதல் கட்டமாக மின்மோட்டாரை கொண்டு அகற்றி தடையில்லா போக்கு வரத்து வசதி ஏற்படுத்திட வேண்டும். மேலும் இனி வரும் காலங்களில் இதுபோல மழை நீரும், கழிவுநீரும் தேங்கி நிற்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலி யுறுத்தினார்.