மதுரை, மே 30- சட்டமன்ற உறுதி மொழிக் குழு தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் மே 30 செவ்வாயன்று மதுரை யில் கள ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. மதுரை மீனாட்சி சுந்த ரேஸ்வரர் கோவிலில் “நாள் முழுவதும் அன்னதானம்” திட்டம் செயல்பாடு குறித் தும், வீர வசந்தராயர் மண்ட பம் கட்டுமான பணிகள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அருகே ரூ 117.05 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தீய ணைப்பு -மீட்பு பணிகள் நிலைய கட்டுமான பணி களின் தரம் குறித்தும். மதுரை மாநகராட்சியின் மூலம் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் ரூ.174.56 கோடி மதிப்பீட்டில் பெரியார் பேருந்து நிலையம் வளாகத்தில் 474 கடைகள் மற்றும் வாகன நிறுத்தம் வச தியுடன் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் கட்டுமானப் பணிகள், அம்ருத் திட்டத் தின் கீழ் மதுரை மாநகராட்சி யின் பகுதிகளில் உள்ள அனைத்துப் வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு ஏற்படுத் திக் கொடுப்பதற்காக ஏற்க னவே இரண்டு கட்டங்களாக பணிகள் நடைபெற்றன. தற் போது எஞ்சியுள்ள 57 வார்டு களிலும் குடிநீர் விநியோக இணைப்புகள் வழங்க மூன் றாம் கட்டமாக நடைபெற்று வரும் குழாய் பதிக்கும் பணி களை ஆய்வு செய்தனர். ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை செயல்பாடு, மதுரை அரசு இராஜாஜி மருத் துவமனை புதிய கட்டிடம் மற்றும் தீக்காய மையம் புன ரமைப்பு பணிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்ட னர். முன்னதாக நிகழ்ச்சி யில் அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் அரசு போக்கு வரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை யை புதூர் பேருந்து பணி மனையில் திறந்து வைத்து . அரசு போக்குவரத்துக் கழக மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பணி யாளர்களின் வாரிசுதா ரர்களுக்கு பணப்பலன் களையும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பணி யாளர்களின் குழந்தை களுக்கு பரிசுகளை வழங்கி னர்.
இதில் சட்டமன்ற உறுப்பி னர் கோ.தளபதி, மேலாண் இயக்குநர் ஆறுமுகம் ஆகி யோர் கலந்துகொண்டனர் சட்டமன்ற குழு ஆய்வில் ஆர்.அருள் (சேலம் மேற்கு) ஐ.கருணாநிதி (பல்லா வரம்), எம்.சக்கரபாணி (வானூர்), ரூபி ஆர்.மனோ கரன் (நாங்குனேரி), எம்.கே. மோகன் (அண்ணா நகர்), பி.ராமலிங்கம் (நாமக்கல்), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை) மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் மா சௌ.சங்கீதா ஆகியோர் கலந்துகொண்டனர். மதுரை மாவட்டத்தில் அரசு துறைகளின் கீழ் வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்பாக வழங்கப் பட்டுள்ள உறுதிமொழிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நட வடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக் குழு தலைவர் தி.வேல்முரு கன் அவர்கள் தலைமையில் வணிகவரி- பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.