சட்டப்பேரவை உறுதிமொழி குழு நாளை சிவகங்கைக்கு வருகை
சிவகங்கை, ஜூன் 20- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதி மொழிக் குழுத்தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் வேல்முரு கன் (பண்ருட்டி தொகுதி) தலைமையிலான குழு ஜூன் 22 அன்று, சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள வுள்ளனர். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவல கக் கூட்டரங்கில், அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டமும் நடத்தவுள்ளனர் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரி வித்துள்ளார்.
தலைமைக்காவலர் தூக்குப்போட்டு தற்கொலை
திண்டுக்கல், ஜுன் 20- திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் தலைமைக்காவலர் செந்தில்குமார் (53). இவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
ஊராட்சிமன்றத் தலைவர் சாவில் சந்தேகம் உறவினர்கள் சாலை மறியல்
விருதுநகர், ஜூன் 20- கிழவனேரி ஊராட்சி மன்றத் தலைவர் சாவில் சந்தேகம் இருப்பதாகக்கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ளது கிழவனேரி. இங்கு ஊராட்சி மன்ற தலைவர் இருந்தவர் கார்த்திக் (31). திருமணமான இவருக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவருக்கு காரியா பட்டியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பெண் வீட்டிற்கு கார்த்திக் சென்றுள் ளார். அப்போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கார்த்திக் அங்குள்ள ஒரு அறைக்குள் சென்று வெகுநேரமாக கதவை திறக்க வில்லை. எனவே, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவரது உடல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூராய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், கிழவனேரி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் விருதுநகர் -மல்லாங் கிணறு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த காரியாபட்டி வட்டாட்சியர் மற்றும் விருது நகர் டி.எஸ்.பி.பவித்ரா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி னர். முடிவில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்ற னர்.
அனைத்துத்துறை திட்டப்பணிகள் விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் ஆய்வு
விருதுநகர், ஜூன் 20- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலருமான ஆனந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். அதில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகள், நிலுவையில் உள்ள அரசால் வழங்கப்படும் பங்களிப்பு தொகை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து, பணி களை விரைந்து முடிக்கவும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைந்திட வேண்டுமென கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார். பின்பு,மாவட்டத்தில் உயர் கல்வியில் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தேர்ச்சி பெற்ற 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் உயர்கல்வியில் சேர மாவட்ட நிர்வா கம் எடுத்து வரும் நடவடிக்கை பற்றி ஆய்வு செய்தார். அனைத்து திட்டப் பணிகளையும் நிர்ணயித்த காலத்திற் குள் முடிக்கவும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் முடிக்க தேவையான நடவடிக்கை பற்றியும், அனைத்து அரசு மருத்துவமனைகளில் தேவை யான மருந்துகளின் இருப்பு குறித்தும் ஆய்வு மேற் கொண்டார். மேலும், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, மாவட்டத்தில் நடத்தப்படவுள்ள பன்னோக்கு மருத்துவ முகாம் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது குறித்தும் அரசு அலு வலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில், துணை இயக்குநர்(புலிகள் காப்ப கம்) திலீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், திட்ட இயக்குநர் தண்டபாணி, தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) அனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை,ஜூன் 20- இராமநாதபுரத்தில் அரசு விழாவில் மாவட்ட ஆட்சி யரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சிவகங்கையில் ஆர்ப் பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதா கிருஷ்ணன், மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் பாண்டி, சேகர், தனபாலன், முத்தையா, ஆனந்தன் நடராஜன் ஆகி யோர் பேசினர்.
ரேசன் அரிசியுடன் சரக்கு வாகனம் பறிமுதல் : 3 பேர் கைது
விருதுநகர், ஜூன்.20- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 200 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். காரியாபட்டியில் உள்ள உழவர் சந்தையின் பின்பகுதியில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த வாகனத்தை சோதனை யிட்டனர். அதில், 5 மூடைகளில் 200 கிலோ அளவிலான ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சரக்கு வாகனம் மற்றும் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, மதுரை மாவட் டத்தைச் சேர்ந்த வாகன உரிமையாளர் மூர்த்தி(21), நவீன்(20), ஆவியூரைச் சேர்ந்த பீட்சி(34) ஆகியோரை கைது செய்தனர்.
அவதூறு வழக்கில் பாஜக மாநில நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்
மதுரை, ஜூன் 20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்து அவதூறு பரப்பிய பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா வுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. சு.வெங்கடேசன் எம்.பி., குறித்து சமூகவலைத் தளத்தில் அவதூறு பரப்பிய புகாரில் பாரதிய ஜனதா கட்சி யின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை சென்னை யில் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை மதுரைக்கு கொண்டுவந்து மத்திய சிறையில் அடைத்த னர். இவர் குறித்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசா ரித்த நீதிபதி டீலா பானு, 30 நாட்கள் தினந்தோறும் காலை 10 மணிக்கு மதுரை சைபர் கிரைம் காவல்நிலை யத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கினார்.
பெண் மருத்துவருக்கு வரதட்சணைக்கொடுமை கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு
தேனி, ஜூன் 20- வரதட்சணை கேட்டு மன ரீதியாக துன்புறுத்தி தலாக் செய்ததாக கூடலூரை சேர்ந்த கணவர் உள்ளிட்ட 7 பேர் மீது தேனி மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி பழனிசெட்டிபட்டி முன்னாள் காவல் துணைக் கண்காணிப்பாளர் குலாம் என்பவர் மகள் ஷகிலா பாத்திமா. இவர் அரசு மருத்துவர் ஆவார் .இவருக்கும் கூடலூரை சேர்ந்த மருத்துவர் அப்பாஸ் மகன் தெளபீக் அகமது என்பவருக்கும் 2.3.2020 ஆம் தேதி தேனியில் திரு மணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதல் உடலை பற்றி கேலி பேசியதாகவும், மேலும் நகை, கார் கேட்டு தொல்லை கொடுத்து வந்தாகவும் ,கருவுற்று குழந்தை பெற்ற நிலை யில் 100 பவுன் நகையை பறித்து கொண்டு, மேலும் 50 பவுன் நகை, காருக்கு மீதம் பணம் பறிக்கும் நோக்கில் கடந்த 4.5.2023 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இரு சாட்சி முன்னிலையில் ஒரே நேரத்தில் இரு தலாக் கூறியுள்ள தாக அறிவிப்பு செய்து துன்புறுத்தியதாக ஷகிலா பாத்திமா புகார் அளித்தார். அதன் பேரில் மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வா ளர் உஷா, ஷகிலா பாத்திமாவின் கணவர் தெளபீக் அக மது, மாமனார் மருத்துவர் அப்பாஸ், மாமியார் ஜெரினா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ரூ.2 கோடி மதிப்பிலான மீன்கள் சிக்கின
நாகர்கோவில், ஜூன் 20 குமரியில் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்த மானார்கள். ஆனால் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின் காரணமாக விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து திங்களன்று அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து 295 விசைப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இந்த விசைப் gடகுகள் இரவு 9 மணி முதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினார்கள். தடை காலம் முடிந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய விசை படகுகளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கொழுவை, நெடுவா முட்பு, எவாய், நவவர போன்ற உயர் ரக மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் பிடித்துக் கொண்டு வந்த உயர்ரக மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மீன் வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர். இதனால் 2 மாதங்களுக்கு பிறகு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களைகட்ட தொடங்கி விட்டது. தடை நீங்கி கடலுக்கு சென்ற முதல் நாளே ரூ. 2 கோடி மதிப்புள்ள மீன்கள் சிக்கின. இதனால் சின்னமுட்டம் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பனிமய மாதா திருவிழா: சிறப்பு ரயில்கள் இயக்க கனிமொழி எம்பி கோரிக்கை!
தூத்துக்குடி, ஜூன் 20 தூத்துக்குடி பனிமய மாதா தங்கத்தேர்த் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பனிமய மாதா பேராலயத்தின் தங்கத்தேர்த் திருவிழா வருகின்ற ஆகஸ்டு 5ஆம் தேதி அன்று நடைபெற இருப்பதை முன் னிட்டு, சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளிலிருந்து திரு விழாவில் பங்கேற்க வரும் மக்களின் பயன்பாட்டிற்காக, ஆகஸ்ட் 3- அன்று சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கும், ஆகஸ்ட் 6 - அன்று தூத்துக்குடியிலிருந்து சென்னைக் கும் சிறப்பு ரயில்கள் இயக்கிட வேண்டும் என தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கனிமொழி எம்பி கடிதம் எழுதியுள்ளார்.
பழங்குடியினர் சாதி சான்றிதழ் கோரி மாணவிகள் மனு
தூத்துக்குடி, ஜூன் 20 தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பயிலும் போது அவர்களுக்கு கல்லூரிகளில் சேர சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால் வருவாய்த் துறையினர் கடந்த பல ஆண்டுகளாக காட்டுநாயக்கன் சமு தாய மக்களுக்கு பழங்குடியின காட்டு நாயக்கன் சாதி சான்றிதழ் வழங்காமல் மறுத்து வருகின்றனர். இதனால் காட்டு நாயக்கன் சமுதாயத்தைச் சேர்ந்த ஏராள மான குழந்தைகள் உயர்படிப்பு படிக்க முடி யாமல் பாதியிலேயே தங்கள் கல்வியை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள் ளது. இந்நிலையில் காட்டுநாயக்கன் சமூ கத்திற்கு சாதி சான்றிதழ் உடனடியாக வழங்க கோரி பாதிக்கப்பட்ட ஏரல் பகு தியை சேர்ந்த மக்கள் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.