districts

img

திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இளமதி பதவியேற்பு

திண்டுக்கல், மார்ச். 4- திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இளமதி தேர்வு செய்யப் பட்டு பதவியேற்றுக்கொண்டார். திண்டுக்கல் மாநகராட்சி மேயர் பதவி க்கு வெள்ளியன்று  23 ஆவது வார்டு திமுக  மாமன்ற உறுப்பினர் இளமதி  வேட்பு மனுவை சமர்ப்பித்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்ய வில்லை. இதனையடுத்து ஏகமனதாக இளமதி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திண்டுக்கல் மாநகராட்சி துவங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. 2 ஆவது மேயராகவும், முதல் பெண் மேயராகவும் இளமதி பதவி ஏற்றுக்கொண்டார்.   பிற்பகலில் நடைபெற்ற துணை மேயர் பதவிக்கு திமுக நகரச்செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ராஜப்பா வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவ ரையும் எதிர்த்து யாரும் போட்டியிடாத தால் ராஜப்பா துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்நிகழ்ச்சியில்  கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு பாது காப்புத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார், சிபிஎம் கவுன்சிலர்கள் மாரி யம்மாள், கே.எஸ்.கணேசன், ஜோதிபாசு ஆகியோர் பங்கேற்றனர். (நநி)