அருப்புக்கோட்டை ஒன்றிய மாதர் சங்க மாநாடு
அருப்புக்கோட்டை, மே.29- அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் அருப் புக்கோட்டை ஒன்றிய 8 ஆவது மாநாடு நடைபெற்றது. பாலையம்பட்டி ராமலிங்க நகரில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு க.லீலாவதி தலைமை தாங்கினார். துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் எஸ்.தெய்வானை பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எம்.கணேசன் வாழ்த்துரை வழங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.உமாமகேஸ்வரி நிறைவுரையாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றியத் தலைவராக பாரதி, செயலாளராக ஏ.ராமலட்சுமி, பொருளாளராக மணி மேகலை ஆகியோர் உட்பட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது.
மோடி அரசைக் கண்டித்து 4 கட்சிகள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை,மே 28- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கை, வெறுப்பு அரசியலைக் கண்டித்தும் பெட்ரோல் - டீசல் -சமையல் எரிவாயு மீதான வரிகளை கைவிட வேண்டும். விலை உயர்வு களை மொத்தமாக திரும்பப்பெற வேண்டும். பருப்பு . சமையல் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தி யாவசியப் பொருட்களையும் நியாய விலைக்கடைகளில் வழங்க வேண்டும். வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ .7500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்-லிபரேசன்), விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பரமக்குடி காந்தி சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூ ரில் அண்ணா சிலை அருகில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் தில் கட்சி நிர்வாகிகள் பேசினர்.பலர் கலந்துகொண்டனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் சாணார் பட்டி ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோபால் பட்டி,கொசவபட்டி ஆகிய ஊர்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அருப்புக்கோட்டையில் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
சிவகாசி அருகே பாஜக பஞ்சாயத்து தலைவரின் செக். பவர் பறிப்பு ஆட்சியர் நடவடிக்கை
சிவகாசி, மே.29- விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது புதுக்கோட்டை. இங்கு ஊராட்சிமன்றத் தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் காளீஸ்வரி. இவர் பாஜக மாவட்ட மகளிர் அணித் தலைவராக உள்ளார். இந்நிலையில், இவருக்கும், ஊராட்சி துணைத் தலைவர் செந்தூரானுக்கும் நிர்வாக ரீதியான கருத்து வேறுபாடுகள் உள்ளதாக கூறப்படு கிறது. மேலும், துணைத் தலைவரின் கருத்தை ஆதரித்து பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளார்களாம். இதனால், ஊராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. இந்தநிலையில், ஊராட்சிமன்றத் தலைவரின் காசோலையின் கையொப்பமிடும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி பறித்து உத்தரவிட்டுள்ளார்.
பணம் கேட்டு சித்த மருத்துவரை கடத்திய 5 பேர் கைது
திண்டுக்கல்,மே 29- இலங்கையை சேர்ந்தவர் யோகநாதன் (வயது 65). இவர் கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர். சித்த மருத்துவம் படித்து திருச்சியில் கேகே நகரில் சித்த மருத்துவராக இருந்து வருகிறார். இந்நிலையில் விருத்தாசலத்தைச் சேர்ந்த சுசீந்திரன், தனது தாத்தா விற்கு மருத்துவம் பார்க்க யோகநாதனை அய்யம்பாளையம் அருகே உள்ள தோட்டத்து வீட்டிற்கு சசிதரன் மற்றும் அவர் நண்பர்கள் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து சசீதரன் மற்றும் 6 பேர் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டை வாங்கி அதிலிருந்து ரூ 25 ஆயிரம் எடுத்துள்ளனர். இதுகுறித்து யோகநாதனின் வளர்ப்பு மகன் விஜய குமார் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். இதனையடுத்து காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு தனிப்படைகள் கண்காணிக்க ஆரம்பித்தனர் .மீண்டும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் விஜயகுமாரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். பணம் தயாராக உள்ளது என்றும் எங்கு வரவேண்டும் என்று கேட்டுள்ளனர். அப்பொழுது கடத்தல் கும்பலைச் சேர்ந்த சசிதரன் பணத்துடன் செம்பட்டி அருகே வருமாறு கூறியுள்ளார் .இதனையடுத்து போலீசார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் சசிதரன் சொன்ன இடத்திற்கு சென்று, மறைந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த சசிதரனை மறைந்திருந்த காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே சசிதரன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் சித்தரேவில் உள்ள தோட்டத்து வீட்டில் இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த கேசி பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் , திருப்பூரைச் சேர்ந்த கோபி , நாகப்பட்டினத்தை சேர்ந்த நாகராஜ் மற்றும் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஜெயராமன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓட முற்பட்டனர் .அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனி டையே கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிய தவயோகிநாதன் பொதுமக்கள் உதவியுடன் திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட சித்தரேவு சேர்ந்த மணி மற்றும் விமல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
நேபாள பயணிகள் விமானம் மாயம்
காத்மாண்டு, மே 29- ஞாயிற்றுக்கிழமை காலை பொக்கா ராவிலிருந்து ஜோம்சோம் நோக்கிப் பறந்து கொண்டிருந்த தாரா ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான ட்வின் ஓட்டர் விமானம் காணாமல் போனது. தாரா ஏர் அதிகாரியின் தகவல்படி பொக் காராவிலிருந்து 19 பயணிகளை ஏற்றிச் சென்ற 9என்-ஏஇடி விமானம் காலை 9:55 மணிக்கு தொடர்பை இழந்தது. விமா னத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதிக்கு மீட்புப் படை ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன. அந்த விமானத்தில் 13 நேபாளிகள், நான்கு இந்தியர்கள், இரண்டு ஜெர்மானியர்கள் மற்றும் மூன்று பணியாளர்கள் பயணம் செய்துள்ளனர். விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.