பொக்லைனுக்கு தீ வைப்பு
நத்தம், ஜூலை 25- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பன்னியாமலை யை சேர்ந்தவர் ராஜா. (45) இவர் தனது தோட்டத்து பகுதியில் தனக்குச் சொந்தமான மண் அள்ளும் பொக் லைன் இயந்திரத்தை நிறுத்தி வைத்துள்ளார். இந்த வாக னத்தையும், அங்கு இருந்த மேற்கூரையையும் அடை யாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்து விட்டனர். இதுகுறித்து ராஜாவின் மனைவி சரசு நத்தம் காவல் நிலை யத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சாணார்பட்டி அங்குராஜ் (37), குட்டூர் தினகரன்(37), பள்ளபட்டி பூசாரி பாண்டியன் (31), நேரு நகர் கோபிநாத் (34), ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நத்தம் நல்லாகுளம் கரைகள் சீரமைப்பு
நத்தம், ஜூலை 25- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் உள் ளது நல்லாகுளம். இதன் நான்கு பக்க கரைகளிலும் செடி, கொடிகள் வளர்ந்து நடைப்பயிற்சி செல்வோருக்கு இடையூறாக இருந்தது. நத்தம் பேரூராட்சி நிர்வாகம் செடி. கொடிகளை அகற்றி நடைப்பயிற்சியாளர்களுக்கு ஏற்பட்ட இடையூறைப் போக்கியது. நடவடிக்கை மேற்கொண்ட பேரூராட்சித் தலைவர் சேக்சிக்கந்தர் பாட்ஷா, செயல் அலுவலர் சரவணக்குமார், தலைமை எழுத்தர் பிரசாத், துப்புரவு ஆய்வாளர் செல்விமேரி, இளநிலை உதவியாளர் அழகர்சாமி ஆகியோருக்கு நடை பயிற்சியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இராமேஸ்வரத்தில் வழிப்பறி
இராமேஸ்வரம், ஜூலை 25- இராமேஸ்வரம் பேக்கரும்பு கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கலைவாணன் (30) இராமேஸ்வரத்தில் தனியார் சூப்பர் மார்க்கெட் கடையில் மேலாளராக இருந்து வருகிறர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்க மாக கடையை அடைத்து விட்டு 11 ஆயிரம் ரொக்க பணத்துடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை எம்.ஆர்.டி நகரை சேர்ந்த ஹரிகரன் (26), சுபாஷ் (25), ராஜேஸ் (26) ஆகிய மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து பேக் கரும்பு தேசிய நெடுஞ்சாலையில் வைத்து கட்டையால் கலைவாணனை தாக்கி அவர் வைத்திருந்த 11 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்துள்ளனர். கலைவாணன் சத்த மிட்டவுடன் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மூன்று பேரையும் விரட்டி பிடிக்க முயன்றனர். ஹரிகரன் மட்டும் அவர்களிடம் சிக்கிக்கொண்டனர். பின்னர் அவரை காவலர்கள் கைது செய்தனர்.
இருசக்கர வாகனம் திருடியவர் கைது
இராமேஸ்வரம், ஜூலை 25- இராமேஸ்வரம் சல்லிமலையை சேர்ந்த வேடராஜன் (60) என்பவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் தனது வீட்டின் முன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்று திரும்பும் போது அவரது இரு சக்கர வாகனத்தை விரைவாக ஒருவர் எடுத்துச்செல்லுவதை கண்ட அதிர்ச்சியடைந்த வேடராஜன் விரட்டி சென்றும் பிடிக்க முடியாத நிலையில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் ஆகிய காவல்துறை சோதனை சாவடியின் கண்காணிப்பு தீவி ரப்படுத்தப்பட்டது. இதையடுத்து இரு சக்கர வாகனத்தை திரு டிக்கொண்டு வந்தவரை மண்டபம் அருகே காவல்துறை யினர் பிடித்தனர். பின்னர் இராமேஸ்வரம் காவல்துறை யினரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சொரி முத்து (21) என்பது தெரியவந்தது.
திருவனந்தபுரம் எம்.எம். சி.எஸ்.ஐ. தேவாலயத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
திருவனந்தபுரம், ஜூலை 25- கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள எம்.எம். சி.எஸ்.ஐ. தேவாலயத்திற்கு சொந்தமான காரக்கோணம் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அதிக பணம் வசூலித்த ஊழல் புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 இடங்களில் விசாரணை நடத்தினர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சிஎஸ்ஐ பேராயத்திற்கு சொந்தமான காரக்கோணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் சேர்க்கையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக மாணவ, மாணவிகள் வெள்ளறடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கல்லூரியில் சேர்ப்பதாகக் கூறி மாணவ, மாணவியரிடம் இருந்து பிஷப் தர்மராஜ் ரசலாம் தலைமையில் ஒரு குழு பல கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு வெள்ளை பேப்பரில் கையெழுத்தும் வாங்கியுள்ளனர். மேலும், நிர்வாகம் வாங்கியதாகக் கூறிய அந்த குழு, கல்லூரியில் இடம் வழங்காத நிலையில், இதில் பிஷப்-க்கு தொடர்பு இல்லை என்று கூறியதாகவும் தெரிவித்து மாணவ, மாணவிகள் உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர். இந்நிலையில், திருவனந்தபுரத்திலுள்ள எல்.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பிஷப் தலைமை அலுவலகம், காரக்கோணம் மருத்துவக் கல்லூரி, நெய்யாற்றின் கரை பகுதியில் உள்ள முன்னாள் நிர்வாகி இல்லம், செறியக் கொல்லா பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி நிர்வாகி இல்லம் என நான்கு இடங்களில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே பல கோடி ரூபாய் முறைகேடு புகார் தொடர்பாக, பிஷப் உட்பட நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொள்ள இருமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீர்வரத்து குறைவு முல்லைப் பெரியாறு நீர்மட்டம் குறைகிறது
தேனி, ஜூலை 25- நீர்ப்பிடிப்புப் பகுதியில் போதிய மழையின்றி நீர் வரத்து குறைந்து விட்ட நிலையில் கூடுதல் தண்ணீர் திறப்பால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கடந்த இரண்டு வாரமாக கேரளாவில் பெய்த தென் மேற்குப் பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 135.90 அடியாக உயர்ந்தது. அணை யின் நீர்மட்டம் 136 அடியைத் தாண்டும் என எதிர்பார்த்த நிலையில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறையத் தொடங்கியது. அதன் பிறகு குறிப்பிடத்தக்க மழை இல்லை. இதனால் தற்போது அணை நீர்மட்டம் 134.35 அடியாக உள்ளது. நீர்வரத்து 1168 கனஅடி, திறப்பு 1972 கன அடி, இருப்பு 5715 மி.கன அடி. வைகை அணை நீர்மட்டம் 61.68 அடியாக உள்ளது. வரத்து 1750 கனஅடி, திறப்பு 69 கன அடி, இருப்பு 3931 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 49.80 அடி, வரத்து 21 கனஅடி, திறப்பு 10 கன அடி, இருப்பு 335 மி.கன அடி. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 70.53 அடி, திறப்பு 3 கன அடி
சிஐடியு பெரியகுளம் தாலுகா மாநாடு
தேனி, ஜூலை 25- பொதுத் தொழிலாளர் (சிஐடியு) சங்க பெரியகுளம் தாலுகா மாநாடு பெரியகுளத்தில் தாலுகா தலைவர் ஆர்.கே.ராமர் தலைமையில் நடைபெற்றது. தாலுகா செயலாளர் எஸ்.கணேசன் வேலை அறிக்கை சமர்ப் பித்தார். கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் ஜி.சண்முகம் மாநாட்டை துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன் நிறைவு செய்து பேசினார். மாநாட்டில் தாலுகா தலைவராக ஏ.மன்னர் மன்னன், செயலாளராக எஸ்.கணேசன், பொருளாளராக ஆர்.கே. ராமர் உள்ளிட்ட 16 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.
வடமலாபுரம் கிராமத்திற்கு கிடைக்குமா குடிநீர்?
விருதுநகர், ஜூலை 25- சிவகாசி அருகே உள்ள வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள் கிழமை மனு அளித்தனர். மனுவில், சிவகாசி அருகே உள்ளது வடமலாபுரம் கிராமம். இங்குள்ள அருந்ததியர் தெருவில் 80 குடும்பங் கள் உள்ளன. இப்பகுதியில் ஒரே ஒரு பொது குடிநீர்க் குழாய் மட்டுமே உள்ளது. இதில் ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் வருகிறது. இதனால், பலருக்குக் குடிநீர் கிடைப்ப தில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரி வித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கூடுதலாக குடிநீர் குழாய் அமைத்துத் தர வேண்டும் என தெரி வித்துள்ளனர்.
ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
விருதுநகர், ஜூலை 25- விருதுநகர் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் உள்ள ஊரணியை தனி நபர் ஆக்கிரமித்து பட்டா பெற் றுள்ளார். அதை ரத்துச் செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென தலித் விடுதலை இயக்கம் மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்துள்ளது. மனுவில், விருதுநகர் அருகே உள்ளது புளியங்குளம் கிராமம். இங்குள்ள சர்வே எண் 125/4- இல் அரசுக்குச் சொந்தமான ஊரணி உள்ளது. இது விவசாய நிலங்க ளுக்கு ஆதாரமாக இருந்து வந்தது. இந்த ஊரணியை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்ததோடு, முறைகேடாக பட்டா மாறுதலும் பெற்றுள்ளார். இது உயர்நீதிமன்ற உத்தர வுப்படி சட்ட விரோதமாகும். முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்து ஊரணியை மீட்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மின் கட்டண உயர்வைக் கைவிட த.மா.கா கோரிக்கை
விருதுநகர், ஜூலை 25- மக்களைப் பாதிக்கும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஏ.ராஜபாண்டியன் மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்துள்ளார். மனுவில், தமிழகம் கடந்த காலங்களில் மின் மிகை மாநிலமாக இருந்தது. தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால், சிறு தொழில்கள் மற்றும் பொது மக்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் 27 சதவீதம் வரை மின் கட்டணம் உயரும் என அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும். இதனால் மின் கட்டணம் குறையும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனால், சிறு தொழில் புரிவோர் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
திருச்சுழி, ஜூலை 25- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள இராஜ கோபாலபுரத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவரது மனைவி செல்லத்தாய் (52). சம்பவத்தன்று இப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த செல்லத்தாய் மீது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய செல்லத் தாய் உயிரிழந்தார். பரளச்சி காவல்துறையினர் விசா ரிக்கின்றனர்.
எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு
மதுரை, ஜூலை 25- மதுரை மாவட்டம் எழுமலையில் உள்ள மயானம் ஒன்றில் சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் சட லமாகக் கிடப்பதாக மக்கள் அளித்த தகவலின் அடிப்ப டையில் சம்பவ இடத்திற்கு வந்த வந்த எழுமலை காவல் துறையினர் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூராய் விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த அருகே மண்ணெய் கேன், தீப்பெட்டி மற்றும் ரூ.40 ஆயிரம் மதிக்கத்தக்க 500 ரூபாய் நோட்டு கள் எரிந்த நிலையில் கிடந்துள்ளது.
பாம்பு கடித்து ஒருவர் பலி
தேனி, ஜூலை.25- தேனி அருகே அரண்மனைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட வீருசின்னம்மாள்புரத்தைச் சேர்ந்த பிரபாகரன் மனைவி ஜெயப்பிரபா (30). இவர் கடந்த 17-ஆம் தேதி தனியாருக்குச் சொந்தமான தென்னத்தோப்பில் வேலைக்கு சென்ற போது பாம்பு கடித்துள்ளது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட இவர் திங்களன்று உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
திருவில்லிபுத்தூர், ஜூலை 25- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நல்ல குற்றாலம் தெருவில் வசிப்பவர் வேல்முருகன் (53). இவ ரது மனைவி செல்வி (46). இவர் சம்பவத்தன்று உணவ கத்தில் மாவு அரைக்கும் இயந்திரத்தில் மாவு அரைத்துக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திரு வில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் விசாரித்தனர்.
விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு
இராஜபாளையம், ஜூலை 24- தமிழ்நாடு விவசாயிகள் சங்க இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் 23-ஆவது மாநாடு முருகன் தலை மையில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் முருகன் கருத்துரையாற்றினார். மாநாட்டில் ஒன்றியத் தலைவராக கு.பூதத்தான், செயலா ளராக எம்.மகேஸ்வரன், பொருளாளராக எஸ்.முருகன் உட்பட 17 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப் பட்டது. மாநாட்டில் காசிராஜன், ஆறுமுகம், மகேஸ்வ ரன், குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
லேப்டாப் திருட்டு
திருவில்லிபுத்தூர், ஜூலை 25- விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் 20 வரு டங்களாக இங்கிலாந்து நாட்டில் மருத்துவராகப் பணி புரிந்து வருகிறார் இவர் சில வாரங்களுக்கு முன்பு திரு வில்லிபுத்தூரில் உள்ள பெற்றோரை பார்க்க வந்தி ருந்தார். தாம் வரும்போது கொண்டு வந்திருந்த ரூ.1.20 லட்சம் மதிப்பிலான லேப்டாப் தமது வீட்டிலிருந்து மாயமாகிவிட்டது. கண்டுபிடித்துத் தர வேண்டுமென பாலாஜியின் தாய் பொன்மணி திருவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விவசாயியை கொல்ல முயன்றவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை
தேனி, ஜூலை 25- தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள மூலக்கடையைச் சேர்ந்தவர் பழனி. இவர் சங்கிலிக்கரடு அருகே உள்ள தனது தோட்டத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கடமலைக்குண்டுவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தனது ஆடுகளை பழனி தோட்டத்தில் மேய விட்டுள்ளார். இதை தட்டி கேட்ட பழனியை ராமகிருஷ்ணன் தொரட்டியால் அடித்து கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். கடமலைக்குண்டு காவல்துறையினர் ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.இது குறித்த வழக்கு தேனி மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றவாளிக்கு ஏழுஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தலைமை நீதிபதி எஸ்.கோபிநாத் தீ்ர்ப்பளித்தார்.
சிவகாசி மாநகராட்சிக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை மாணிக்கம் தாகூர் எம்.பி., குற்றச்சாட்டு
சிவகாசி, ஜூலை 23- சிவகாசி மாநகராட்சியின் முன்னேற்றத்திற்காக பிரத மர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு எவ்வித நிதியும் வழங்கவில்லை என்று விருதுநகர் தொகுதி மக்க ளவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். சிவகாசி மாநகராட்சியில் “எனது குப்பை எனது பொறுப்பு எனது நகரம் எனது பெருமை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தி யாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: ஒன்றிய பாஜக அரசானது தொடர்ச்சியாக சிவகாசி நகராட்சியை புறக்கணித்து வருகிறது. எந்தவொரு நிதி உதவியையும் இது வரை சிவகாசி மாநகராட்சிக்கு செய்ய வில்லை. இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் குரல் கொடுப்பேன், சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அமைக்க மாவட்டத் தில் உள்ள இரு அமைச்சர்கள் ஆய்வு செய்து பணியை தொடர உதவி செய்வார்கள் என நம்புகிறேன். உயர்நீதி மன்றத்தில் வழக்கு முடிந்தவுடன் இப்பணிகள் விரைவு படுத்தப்படும். சென்னை -கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலானது கடந்தாண்டு வரை சிவகாசி ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது. இது குறித்து ரயில்வேத்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி இந்த ரயிலானது சிவகாசியில் நின்று செல்லுமென அறி வித்துள்ளார். அவ்வாறு நிற்கவில்லையென்றால் செப்டம்பர் 22 அன்று கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலை சிவகாசி ரயில் நிலையத்தில் நிறுத்தக் கோரி எனது தலைமையில் மறியல் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்துக! வாலிபர் சங்கம் வலியுறுத்தல்
விருதுநகர், ஜூலை 25- விருதுநகர் மாவட்டத் தலைநகரான விருதுநகரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக மக்க ளின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். தொலைதூரப் பேருந்துகள் அனைத்தும் விருதுநகருக் குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்க விருதுநகர் நகர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது விருதுநகர் எம்.ஆர்.வி நினைவகத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு நகர் தலைவர் தீபக்குமார் தலைமை வகித்தார். நகர் செயலாளர் பி.கருப்பசாமி துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் எம்.ஜெய பாரத் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் தேர்வு: மாநாட்டில் நகர் தலைவராக எம்.பொன்பாண்டி, செயலாளராக தீபக்குமார், பொரு ளாளராக குணசுந்தர், துணைத் தலைவராக வீரக்குமார், துணைச் செயலாளராக சத்யா உட்பட 11 பேர் கொண்ட நகர்க்குழு தேர்வு செய்யப்பட்டது.