districts

img

போதை பாக்குகள் பதுக்கியவர் கைது

 திருவில்லிபுத்தூர், மார்ச்.30-  திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மதுரை மெயின் ரோடு, கிருஷ்ணன் கோவிலில் பெட்டி கடை வைத்திருப்பவர் தெய்வம். இவரது கடையில் சம்பவத்தன்று கிருஷ்ணன்கோவில் காவல் துறையினர் சோதனையிட்ட போது அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள், புகையிலை கள் ஆகிய 1,640 பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  காவல்துறையினர் தெய்வத்தை கைது செய்து, போதைப் பாக்கு பொட்டலங்கள், ரூ.26 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.