திருவில்லிபுத்தூர் நகராட்சி சார்பாக பகுதி சபா கூட்டம் அய்யம்பட்டி தெரு , ஊரணிரணிப்பட்டி தெரு ஆகியவற்றில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் செல்வமணி ,நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், நகராட்சி பொறியாளர் தங்கப்பாண்டியன், நகர் நல அலுவலர் கவிப்பிரியா, மேலாளர் பாபு, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், சந்திரா உட்பட நகராட்சி அலுவலர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் பேசினர். இதற்கு நகர்மன்ற தலைவர் பதிலளித்தார். கூட்டத்தில் கால்நடை துறை, குழந்தைகள் நல அமைப்பு உட்பட தொண்டு நிறுவனங்களும் கலந்து கொண்டனர்.