districts

விவசாயத்தை ஆள்கிறதா நவீன இயந்திரங்கள்?

நாமக்கல் மாவட்டம், பள் ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் சுற்று வட்டார பகுதிகளில், நடப்பாண் டில் நெல் மகசூல் கணிசமாக அதி கரித்துள்ளது. இதன் காரணமாக  தற்போது நெல் பயிர்கள் அனைத் தும் முழுமையாக வளர்ந்து விட் டதால், அறுவடை செய்யும் பணி கள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பள்ளிபாளையம் - திருச்செங் கோடு சாலை, அலமேடு பகுதியில்  கர்நாடகா பொன்னி, பிபிடி ரக நெல் மற்றும் பல்வேறு தரப்பட்ட நெல் அறுவடை செய்யும் பணி கள்  நடைபெற்று வருகிறது. இந்நி லையில், விவசாய வேலைக்கு போதிய ஆட்கள் கிடைக்காததால், நெல் அறுவடை இயந்திரங்களைக் கொண்டு பணிகளை செய்து வருவ தாக விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நெல் விவசாயி முத்து என்பவர் கூறுகையில், நெல் அறுவடை பணிகள் தற்போது  நடைபெற்று வருகிறது. அறுவடை பணிக்கு குறைந்தபட்சம் 15 முதல் 20 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் மட்டுமே நெல் அறு வடை பணிகளை மேற்கொள்ள முடியும். ஆனாலும் போதிய தொழி லாளர்கள் விவசாய பணிகளுக்கு கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும், ஒரு ஆண் தொழி லாளருக்கு ரூ.700 முதல் ரூ.800 வரையும், பெண் தொழிலாளருக்கு ரூ.500 முதல் ரூ.600 வரையும் ஊதியம் தர வேண்டியுள்ளது. அப் படியே தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வந்தாலும், போட்ட முதலீட்டையே எடுக்க முடி யாத அளவுக்கு நிலைமை மோச மானதாக இருக்கிறது. இதனால், நெல் அறுவடை அதி நவீன இயந்திரத்தை பயன்படுத்தி அறுவடை பணிகளை வேறு வழி யின்றி மேற்கொண்டு வருகிறோம். சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரத்து 500 அறுவடை இயந்திரத்துக்கு வாடகை கேட்கிறார்கள். 2 மணி  நேரத்தில் மொத்தமாக சுமார் ஒரு  ஏக்கர் பரப்பளவில் அறுவடை  பணிகள் முடிந்து விடுகிறது.

இதுவே விவசாய தொழிலாளர் களை பயன்படுத்தும் போது ஒன்று முதல் இரண்டு நாட்கள் முழுமை யாக ஆகி விடுகிறது. ஆனால், தொழிலாளருக்கு தர வேண்டிய கூலித்தொகை, இதர செலவுகள் என ரூ.20 ஆயிரத்தை தாண்டி  விடுகிறது. இப்படி வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி வேலைகளை செய்தாலும், அதிகபட்சமாக மிஞ்சு வது, நெல் அறுவடை போக மீத முள்ள வைக்கோலை மாடுகளுக்கு தீவனமாக பயன்படுவது மட்டுமே.  ஆனால், அதனை லாபமாக கருத  முடியாது. அந்த அளவுக்கு விவ சாய தொழில் உள்ளது. மேலும், நெல் நடவு உள்ளிட்ட பணிகளுக்கு கூட தொழிலாளர்களை அமர்த்தா மல், அனைத்து வேலைகளையும் நாங்களே செய்து கொள்கிறோம், என தெரிவித்தார். அதிநவீன இயந்திரங்களின் பயன்பாடு தொழில் துறைக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் உறுது ணையாக இருக்கிறது என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. ஆனால், விவசாயத்தைப் பொறுத் தவரை உழவன் இல்லையேல் உணவு இல்லை என்ற பழமொ ழிக்கு எடுத்துக்காட்டாய் ஒன்றிய, மாநில அரசுகள் விவசாயத்தின் அருமை உணர்ந்து, விவசாயி களின் எண்ணங்களை புரிந்து கொண்டு, விவசாய பணிகளில் விவ சாயிகளுக்கு நிலவும் பிரச்சனை களை களைந்து, அதற்கு தீர்வு  காண்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசா யம் செழிப்பதற்கு தொலைநோக் குப் பார்வையுடன் திட்டங்களை தீட்டி, விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வ லர்களின் ஒருமித்த குரலாக உள் ளது. -மா.பிரபாகரன், பள்ளிபாளையம்.