districts

img

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தொல்லியல் கண்காட்சி

திருப்பூர், நவ.22- செல்லம்மாள் காலனியில் உலக மரபு வார விழாவினை முன்னிட்டுத் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தொல் லியல் கண்காட்சி நடைபெற்றது.  திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கோ.  அமுதா கண்காட்சியினைத் தொடங்கி வைத்து அகழ்வா ராய்ச்சியின் முக்கியத்துவத்தையும், நம் முன்னோர்களின் சிறப்புக்களையும் நுட்பமான கலைத்திறனை விழக்கி பேசி னார். தொல்லியல் துறையின் முக்கியத்துவத்தையும் இன் றைய தலைமுறையினர் அவற்றைத் தெரிந்திருக்க வேண்டிய தன் அவசியத்தையும் வட்டாரக் கல்வி அலுவலர் பி. முஸ்ராக்  பேகம் பேசினார்.  இதைதொடர்ந்து தொல்லியல் அலுவலர்  செ. நந்தகுமார் கண்காட்சியின் முக்கியத்துவம் குறித்தும்  மாணாக்கர் எவ்வாறு பழம்பொருட்களைச் சேகரிக்கும் பணி யினைச் செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கிய தோடு, தமிழ் எண்ணுருக்கள் எழுதும் போட்டியில் வெற்றி  பெற்ற மாணாக்கருக்கு பரிசினை வழங்கினார். தொல்லி யல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர் சு.இர விக்குமார் மற்றும்  பொன்னுச்சாமி கண்காட்சியில் வைக்கப் பட்டிருந்த பொருட்களைக் குறித்து விளக்கிக் கூறினார்கள். இறுதியாக ஆசிரியை கோ.விஜயலெட்சுமி நன்றி கூறி னார்.