districts

img

சிவகங்கை, இராமநாதபுரத்தில் சிஐடியு, விவசாயிகள்,தொழிலாளர்கள் பிரச்சாரம்

சிவகங்கை,மார்ச் 10-  விவசாய விளைபொருட்க ளுக்கு ஒன்றரை மடங்கு ஆதார விலை தருவதாக ஒன்றிய அரசு அளித்த உறுதிமொழியைத் நிறை வேற்ற வேண்டும். தொழிலாளர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் ,ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்த முறை ஒழிக்கப்பட்டு ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். பொ துத்துறையை தனியார்மய மாக்கும் மக்கள் விரோத செயலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஏப்ரல் 5 தில்லி நாடாளு மன்றம் நோக்கி விவசாயிகள், தொழிலாளர்கள் பேரணி நடை பெறுகிறது. இந்த பேரணியை விளக்கி சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசா யத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் முழு வதும் 100 கிராமங்களில் நடை பயண பிரச்சாரம் நடைபெற்றது.  சிவகங்கை மாவட்டம் காளை யார்கோவில் தாலுகா மறவமங்க லத்தில் பிரச்சாரத்தை மாநில துணைத் தலைவர் முத்துராமு தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் சாத்தப்பன் தலைமை வகித்தார். மந்திக்கண்மாய்,சிலுக்கப்பட்டி,புலியடிதம்மம்,காளையார்கோயில், கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை ஆகிய ஊர்களில் பிரச்சாரம் நடந்தது.  கல்லல், திருப்பத்தூர், எஸ்.புதூரில் பிரச்சாரம் நடந்தது. விவசா யிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஏ .ஆறுமுகம் தலைமை  வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ .ஆர். மோகன் ,சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ .சேதுராமன், கட்டு மான சங்கத்தின் மாவட்ட செய லாளர் எஸ். முருகேசன் ஆகியோர்  பேசினர்.  

சிவகங்கை ஒன்றியத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் விவசா யிகள் சங்கத்தின் மாவட்ட பொரு ளாளர் விசுவநாதன், சிஐடியு மாவட்ட பொருளாளர் தட்சிணா மூர்த்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் உமாநாத் , வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுரேஷ், கீழப்பூங்குடி ஊராட்சி மன்ற தலை வர் சிவப்பிரகாசம் ,மேலபூங்குடி ஊராட்சி மன்ற உறுப்பினர் மகா லிங்கம் ஆகியோர் பேசினர். காஞ்சி ரங்காலில் தொடங்கி காஞ்சி ரங்கால் அண்ணா நகர் ,மதகுபட்டி, சோழபுரம், அலவாக்கோட்டை, லட்சுமிபுரம், வீரப்பட்டி, கீழப் பூங்குடி, மேலப்பங்குடி ,மலம்பட்டி கூட்டுறவு பட்டி ,சாலூர் , காம ராஜ் நகர், சிவகங்கை அம்பேத் கார் சிலை அருகில்  பிரச்சாரம் நிறைவு பெற்றது. திருப்புவனத்தில் பழையூரில் பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் தண்டியப்பன் தொடங்கி வைத்தார் .விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி ,விவ சாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பொன்னுச் சாமி ஆகியோர் பேசினர். இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் நடைபயண மக்கள்  சந்திப்பு பிரச்சாரம்  விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி. மயில்வாகனன் ,சிஐடியு மாவட்ட நிர்வாகி ஏ.சுடலைக்காசி தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் எம். சிவாஜி துவக்கி வைத்தார் . பள்ளபச்சேரி, கொதக் கோட்டை, கொட்டியக்காரன் வலசை, கோகுல் நகர், சுப்பு தேவன் வலசை உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது.