districts

img

மாநகராட்சிப் பள்ளி சாதனை மாணவர்களுக்கு பாராட்டு

திண்டுக்கல், ஜுன் 19- திண்டுக்கல் நேருஜி நினைவு மாநக ராட்சிப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று  சாதனை படைத்த மாணவர்களுக்கு முன் னாள் மாணவர்கள் பரிசுத் தொகையும், கேடயமும் வழங்கிக் கௌரவித்தனர்.  திண்டுக்கல் நேருஜி நினைவு மாநக ராட்சிப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும்  பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப் பெண்கள் பெற்று சாதனை படைத்த மாண வர்களுக்கு 1973-ஆம் ஆண்டு பத்தாம்  வகுப்பு படித்த மாணவர்கள் பாராட்டு விழா  நடத்தினர். பத்தாம் வகுப்பில் 500 மதிப் பெண்களுக்கு 431 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர் ஏ. கிரிஷ்க்கு ரூ.5 ஆயிரம், 396 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பிடித்த மாணவர் என். ஹரிகிருஷ்ணனுக்கு ரூ.3 ஆயிரம், 389 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்த ஏ.ஹரிசர்வேஸ்வருக்கு ரூ.2 ஆயி ரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. அனை வருக்கும் கேடயங்களும் வழங்கப்பட்டது.   பன்னிரெண்டாம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு 540 மதிப்பெண் பெற்று  பள்ளியில் முதலிடம் பிடித்த ப.முஹமது உசேனுக்கு ரூ.5 ஆயிரம், 522 மதிப் பெண் பெற்று இரண்டாமிடம் பிடித்த ப.அன்பு மணிக்கு ரூ.3 ஆயிரம், 511 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்த லு. புரோஸ்கானுக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரி சும் கேடயங்களும் வழங்கப்பட்டது.  நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசி ரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். முன்னாள் மாணவர் குழு நிர்வாகிகள் எஸ்.தேவதாஸ், எம்.எல். கேசவன், எஸ்.சுந்தர வடிவேலு, ஆர்.சரவணன், எஸ்.கணேசன்,  வி.சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.