சிவகங்கை, நவ.16- சிவகங்கை மாவட்ட ஆசிரியர் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் 2019 ஜனவரி யில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற வர்களுக்கு இயக்க செம்மல் விருது வழங்கும் விழா காளையார்கோயில் உள்ள தனியார் மண்டபத்தில் நடை பெற்றது. விழாவிற்கு மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துப் பாண்டியன் வரவேற்று பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப்ரோஸ், குமரேசன் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயலாளர் முருகன் சிறப்புரையாற்றினர். மாநில பொதுச் செயலாளர் மயில் விருதுகளை வழங்கி உரை யாற்றினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்