சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிராண்ட் மாஸ்டர் எம்.பிரனேஷ்-க்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, கலந்து கொண்டு பாராட்டுக்களை தெரிவித்தார். உடன் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஜி.ரவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், வித்யா கிரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர்.சுவாமிநாதன்,காரைக்குடி நகர்மன்றத் தலைவர் எஸ்.முத்துத்துரை, சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் என்.கருப்பையா, செயலர் எம்.கண்ணன் மற்றும் பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் மற்றும் எம்.பிரனேஷின் பெற்றோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.