districts

img

தென்கொரிய ஓவியப் போட்டியில் முதல் பரிசு வென்ற ஆண்டிபட்டி மாணவி

தேனி, மே 31-  உலக பாதுகாப்பு நாளை முன்னிட்டு தென் கொரிய நிறுவனம் சார்பில் நடை பெற்ற ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட ஆண்டிபட்டி -ஜக்கம்பட்டியை சேர்ந்த மாணவி ஸ்ரீனிகா முதல் பரிசை வென்றுள்ளார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே  சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கவிதா டெக்ஸ் உரிமையாளர்  எஸ்.பழனிச் சாமி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நீண்ட கால உறுப்பினர் ஆவார். இவ ரது மகன் ப.கார்த்திக் -ரம்யா தம்பதிய ரின் மகள் ஸ்ரீனிகா. இவர் தேனியில் உள்ள மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் 6 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். தென்கொரிய நிறுவனம் உலக பாதுகாப்பு  தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டிக்கு அழைப்பு விடுத்திருந்தது .அதில் கலந்து  கொண்டு ஓவியம் வரைந்து அனுப்பி யிருந்தார். இந்த போட்டியில் மாணவி ஸ்ரீனிகா வரைந்திருந்த ஓவியம் முதலிடத்தை பிடித்தது. தென்கொரியாவில் நடை பெற்ற நிகழ்ச்சியில் மாணவி ஸ்ரீனிகாவிற்கு  முதலிடம் பெற்றதற்கான சான்று மற்றும்  முதல் பரிசு ரூ.50 ஆயிரம் ரொக்கம் வழங்  கப்பட்டது.

;