districts

img

மதுரை துணைமேயரை கொல்ல முயன்ற சம்பவம்

மதுரை, ஜன. 11-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு உறுப்பினரும்,  மதுரை மாநகராட்சித் துணை மேய ருமான தி. நாகராஜனின்  வீடு மற்றும் அவரது அலுவலகம் மீது திங் களன்று சிலரின் தூண்டுதலின் பேரில் கூலிப்படையினர் தாக்குதல்  நடத்தினர். இந்தச் சம்பவத்தில் துணைமேயர் தி.நாகராஜன், அவரது மனைவி ஆகியோர் நூலிழையில் உயிர்தப்பினர்.

கே.பாலகிருஷ்ணன் சந்திப்பு
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வியாழனன்று நாகராஜனை அவ ரது இல்லத்தில் சந்தித்து நடை பெற்ற சம்பவம் குறித்துக் கேட்ட றிந்தார். அப்போது, மதுரை மக்க ளவை உறுப்பினரும் கட்சியின்  மாநிலச் செயற்குழு உறுப்பினரு மான  சு. வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநி லக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், தூத்துக்குடி மாவட்டச் செய லாளர் கே.பி.ஆறுமுகம்  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

சமூக விரோதிகளின் நடமாட்டம்
தொடர்ந்து செய்தியாளர்களி டம் பேசிய கே.பாலகிருஷ்ணன், “மதுரை துணை மேயர் தி.நாக ராஜனை கொலை செய்ய வேண்  டும் என்ற நோக்கத்தோடு கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ள னர். இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்  படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி எப்போதும் அரசிய லில் வன்முறையை ஆதரிப்பதில்லை. மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதி யில் மாலை நேரத்தில் நடந்த இந்தச்  சம்பவம் மூலம் காவல்துறையின் மெத்தனமான செயல்பாடு தெரி கிறது.

சமூக விரோதிகள் சர்வ  சுதந்திரமாக எதை வேண்டுமானா லும் செய்யலாம் என்ற நிலை இருப்பதையே  காட்டுகிறது.  எவ்வித தயக்கமும் இன்றி சமூக  விரோதிகள் மேற்கொண்ட இந்தச்  செயலின் பின்னால் காவல்துறை யும் கைகோர்த்திருக்குமோ என்ற  சந்தேகம் எழுகிறது.

துணை மேய ரின் மனைவி, சம்பவம் நடந்தவுடன் காவல் ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்தபோது, அவர், தான் ஒரு  கூட்டத்திலிருப்பதாக அலட்சிய மாகப் பதிலளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகர் காவல்  துறை முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். காவல்துறை அதி காரிகளிடமும் விசாரிக்க வேண் டும். சம்பவம் தொடர்பாக இரு வரை கைது செய்துள்ளனர். சம்ப வத்தில் தொடர்புடைய அனைவ ரையும் கைது செய்ய வேண்டும். இந்தச் சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை. துணைமேயர் விழிப்பாக இருந்த தால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டி ருக்கிறது. கட்சி நடத்திய வலுவான  போராட்டத்திற்குப் பின்னர் தான் வழக்குப் பதியப்பட்டுள்ளது. 

முதல்வரைச் சந்திப்போம்
போதைப்பொருள் பழக்கம் சமு தாயத்திற்கு அச்சுறுத்தலாகவே இருக்கிறது. பள்ளி மாண வர்கள், சிறுவர்கள் கூடப் போதைப்பழக்கத்திற்கு அடிமை யாகியுள்ளனர். இதனால், போதைப் பொருள் விற்பனைக்குத் தடையாக இருக்கிறவர்களை கொலை செய்து தீர்த்துக்கட்டும் வேலையில் சமூக விரோதிகள் ஈடுபட்டுவருகின்றனர்.  

துணை மேயர் மீது தாக்குதல் சம்பவத்தில்  ஈடுபட்டவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் தொடர்புடைய வர்களாகவும் இருக்கின்றனர். இதையும் தமிழக முதல்வரின் கவ னத்திற்கு கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார். இந்தச் சம்பவத்தின் பின்புல மாக இருப்பது திமுக பிரமுகர் என்று கூறப்படுகிறதே என செய்தி யாளர் ஒருவர் எழுப்பிய கேள்  விக்கு பதிலளித்த கே.பாலகிருஷ்  ணன், “இது சமூக விரோதிகளுக் கும் சமூக நலன் காக்கும் அரசியல்  நடத்துபவர்களுக்கும் இடையி லான பிரச்சனை. திமுக-வுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்  கும் இடையில் எந்தப் பிரச்சனை யும் இல்லை. திமுகவுடன் இணை ந்து பாஜகவை வீழ்த்த செயல்பட்டு வருகிறோம்” என்றார்