districts

மதுரை முக்கிய செய்திகள்

விருதுநகர் ஆட்சியரகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ. 6.68 லட்சம் சிக்கியது

விருதுநகர்,அக்.14- விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் வெள்ளியன்று  லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை யில் கணக்கில் காட்டாத 6 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் சிக்கியது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் உதவி இயக்குனர் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இங்கு நெல்லையை சேர்ந்த உதவி இயக்குனராக உமா சங்கர் (வயது 57) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரது அலுவ லகத்தில் அக்டோபர் 14 வெள்ளியன்று மாலை  விருது நகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை மாவட்ட கூடுதல் போலிஸ் சூப்பிரண்ட் ராமசந்திரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார்  சோதனை நடத்தினர்.இதில்  6 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணம் அங்கு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தியதில் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். லஞ்ச பணத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதே அலுவலகத்தில் 2019 இல் தீபாவளி பண்டிகையின் போது அப்போதைய உதவி இயக்குனர் விஷ்ணு பரண், ஓட்டுநர் சரவணன் ஆகியோரிடமிருந்து லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயத் தொழிலாளர் சங்க ரெட்டியார்சத்திரம் ஒன்றிய மாநாடு

திண்டுக்கல்,அக்.14- அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய மாநாடு ராமலிங்கபட்டியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர்  பொன்மலைகணேசன் தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர்  உமா மகேஸ்வரி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட செயலாளர்  கே. அருள்செல்வன் துவக்கவுரை நிகழ்த்தி னார். ஒன்றிய செயலாளர் பி. நாகராஜன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல், தமிழ்நாடு விவசா யிகள் சங்க ஒன்றிய செயலாளர் தயாளன், ஒன்றிய தலை வர் தங்கவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத் தலைவர் பி.வசந்தாமணி நிறைவுரை யாற்றினார். மாநாட்டில் ஒன்றியத் தலைவராக சந்துரு, செயலா ளராக பி.நாகராஜன், பொருளாளராக  உமா மகேஸ்வரி  உள்ளிட்ட 13பேர்  கொண்ட ஒன்றியக்குழு தேர்ந்தெடுக்கப் பட்டது. நூறு நாள் வேலைத் திட்டத்தை தொடர்ந்து நிறை வேற்ற வேண்டும்.  திட்ட நிதியில் இருந்து கட்டுமானப் பணி களுக்கு எடுக்கக்கூடாது. முதியோர் பென்சன் அனைவ ருக்கும் வழங்க வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா இல்லாத அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மாணவிக்கு பாலியல் தொல்லை கம்பத்தில் தனியார் பள்ளி  ஆசிரியர் கைது 

தேனி,அக்.14- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கம்பம் சக்தி விநாயகர் மெட்ரிக் பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (35). இவர் கம்பத்தில் உள்ள சக்தி விநாய கர் மெட்ரிக்  பள்ளியில் சமூக அறிவியல் பாட ஆசிரி யராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக அதே  பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியில் திரண்டு சம்பந்தப்பட்ட ஆசிரி யர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். இதனைதொடர்ந்து கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர்  ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பூவந்தி அரசு மருத்துவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு மனு

சிவகங்கை,அக்.14-  சிவகங்கை மாவட்டம் பூவந்தி அரசு மேம் படுத்தப்பட்ட சுகாதார மருத்துவமனையில் மருத்து வர்களின் கவனக்குறைவால் குழந்தை இறந்தது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜேம்ஸ் ராஜா, மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளா ளர் இன்னாசி ராஜா ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.   அந்த  புகாரில், கடந்த 5. 8. 2022 அன்று மேலப் பூவந்தியைச் சேர்ந்த நிருபன் சக்கரவர்த்தி மனைவி தனலட்சுமியின் மகப்பேறு சிகிச்சையின் போது 8 மாத சிசு உயிரிழந்து விட்டது. இது தொடர்பாக மருத்துவ அதி காரி, மருத்துவர்,செவிலியர் கவனக்குறைவு காரண மாகத்தான் குழந்தை இறந்தது என்று பெற்றோர் தரப்பில் புகார் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர். 

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை:  ஒரே நாளில் முல்லைப் பெரியாறு  அணையில் 2 அடி நீர்மட்டம் உயர்வு

தேனி ,அக்.14- நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது . தேனி மாவட்டம் மற்றும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள் மீண்டும் நிரம்பி வருகின்றன. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது நீர் வரத்து அதிகரித்து வருகிறது. வியாழனன்று  127.05 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை  காலை 129 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2 அடி நீர்மட்டம் கூடியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணைக்கு வினாடிக்கு 4783 கன அடி நீர் வருகிறது. 1300 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4482 மி.கன அடியாக உள்ளது.  

71 அடி உயரமுள்ள வைகை அணை நீர்மட்டம் 67.72 அடியாக உள்ளது. நீர் வரத்து 1823 கன அடி.  திறப்பு 899 கன அடி. இருப்பு 5254 மி.கன அடி. மஞ்சளாறு அணை ஏற்கனவே நிரம்பி முழுக்கொள்ள ளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு தேனி, திண்டுக்கல் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல் சோத்துப்பாறை அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த 2 அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்து 250 கன அடி. அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரியாக வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை நீர் மட்டம் 120.37 அடி. வரத்து 33 கன அடி. திறப்பு 33 கன அடி. இருப்பு 90.30 மி.கன அடி. அருவிகளில் குளிக்க தடை கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதே போல் சுருளி அருவி, அணைப்பிள்ளையார் அருவி களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்  செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  மழையளவு  பெரியாறு 3.1, தேக்கடி 46.2, கூடலூர் 1.4, உத்தம பாளையம் 3.4, மஞ்சளாறு 33, சோத்துப்பாறை 36, போடி 19.2, பெரியகுளம் 2 மி.மீ மழை அளவு பதிவாகி யுள்ளது.

குடிசை மாற்று வாரிய ஒதுக்கீடுகளில் பணம்  செலுத்தியவர்களுக்கு பட்டா -பத்திரம் வழங்கிடுக! மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் மனு அளிப்பு 

மதுரை, அக் 14-  குடிசைமாற்று வாரிய ஒதுக்கீடுகளில் பணம் செலுத்தி - நீண்டகாலமான நபர்களுக்கு பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது.. குடிசை மாற்று வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளர்கள் தங்களுக்கான நிர்ண யிக்கப்பட்ட தொகையை உரிய வாரியத்திடம் செலுத்தி யும் கூட பல ஆண்டுகளாக பட்டாவோ, பத்திரமோ பணம் செலுத்தி முடித்து இடத்தின் உரிமையாளராக அறிவிக்கப்படுவதற்கான ஒப்புகைச் சான்றுகள் பெறப்படாமல் தொடர்ந்து தங்களது வீடுகளில் ஐயத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். மேற்படி குறைகளை தீர்க்கக் கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை. ஸ்டாலின், மாவட்டக்குழு உறுப்பினர்கள்  என். ஜெயச்சந்திரன் ,மாமன்ற உறுப்பினர்கள் டி. குமர வேல், வை. ஜென்னியம்மாள்  மற்றும் வழக்கறிஞர் வெங்கடேசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் எஸ், அனிஸ் சேகரிடம் வெள்ளியன்று நேரில்  சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், மதுரை மாநகரில் 1980 ஆம் ஆண்டுகளில் இருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு - பொதுமக்களுக்கு வீட்டடி மனைகள் வழங்கப்பட்டது. அதற்கான விலையும் நிர்ணயிக்கப்பட்டு பொதுமக்கள் செலுத்தியுள்ளனர். அதில் சில குடும்பங்கள் அரசின் ஒப்புதல் பெறப்பட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், அனைவருக்கும் இன்னும் முழுமையாக பட்டா கிடைக்காத நிலை உள்ளது. இதேபோல் இன்னும் சுமார் 16 திட்டங்கள் அரசின் ஒப்புதலை எதிர்நோக்கி அலுவலகங்களில் தேங்கியிருப்பதாக தெரிய வருகிறது. 10-க்கும் மேற்பட்ட திட்டங்கள் நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையாக உள்ளது. குடிசைமாற்று வாரியத்தால் திட்டங்கள் போடப்பட்ட பொழுதே பொதுப்பணித்துறை உள்பட சம்பந்தப்பட்ட துறைகளிடமும் அனுமதி பெற்றே திட்டங்கள் இறுதியாக்கப்பட்டு வீட்டடி மனைகள் மக்களுக்கு ஒதுக்கப்பட்டது என்பதையும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். பல ஆண்டுகளாக தங்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களில் குடியிருந்து வரும் மக்க ளுக்கு அந்த இடம் சொந்தமாக இல்லை என்ற நிலை யில் அந்த மக்களுக்கு மன வேதனையை உருவாக்கி யுள்ளது. இந்த நிலையிலிருந்து மக்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் தாங்கள் குடியிருந்து வரும் நிலத்தை அவர்க ளுக்கு சொந்தமாக்கிடும் வகையில் அவர்களது பெயருக்கு பட்டா, பத்திரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.