districts

img

ரூ.7 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், அங்கன்வாடிகள் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும்; வைகை நதியில் தொடர் தூய்மைப்பணி

மதுரை, மே 11- மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம்  மே 11 புத னன்று காலை 11.30 மணிக்கு துவங்கி, நடை பெற்றது. இதில் மேயர் இந்திராணி, துணை  மேயர் டி.நாகராஜன், ஆணையாளர் கார்த்தி கேயன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்ட னர். பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு: கல்வி  ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் அமைத்தல், கழிவறைகள் அமைத்தல், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்தல், அங்கன்வாடிகள் அமைத்தல், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை, தற்காலிகமாக மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

அழகர்கோவில் சாலையில் உள்ள சிறப்பு திறன் பூங்காவில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சிறப்புத்திறன் குழந்தைகள் பயிற்சி மையம் அமைக்கப்படும். மறைமலை அடிகள் பள்ளியில் உள்ள சிறப்புத் திறன் குழந்தைகளுக்கன மையம் போதிய இட வசதி இன்றி நெருக்கடியில் உள்ளது. இது ஆரப்பாளையத்தில் உள்ள கலைவாணர் கூடத்தில் பூங்காவுடன் கூடிய விசாலமான இடத்திற்கு மாற்றப்பட்டு செயல்படுத்தப்படும். அதற்கு ரூ.10 லட்சம் மதியீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.  பொலிவுறு நகர திட்டத்தில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் போட்டித் தேர்வுக்கு தயராகும் மாண வர்களுக்கென அறிவுசார் மையம் மற்றும் நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது. 

சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளம் 

நகரின் பசுமை சூழலை மேம்படுத்த சாலை யோரங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கும் அடர் வனக்காடுகள் அமைக்கவும் முக்கியத்துவம் வழங்கப்படும்.  அம்ருத் 2.0 திட்டம், அரசு திட்டங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரி மேம்படுத்த நட வடிக்கை எடுக்கப்படும். பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சி அம்மன் கோவில் அருகில் அமையவுள்ள பல்லடுக்கு வாகன நிறுத்தம் ஆகிய பகுதிகளில் மின்சார வாக னங்களை சார்ஜ் வசதி ஏற்படுத்தப்படும்.

பூங்காக்கள் 

மாநகராட்சி பூங்காக்கள் புனரமைக்கப்படும். மேலும், சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு மாநகராட்சி யில் உள்ள 202 பூங்காக்களையும் நல்ல முறை யில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  சுற்றுச்சூழல் பூங்காவை தனியார் பங்களிப்பு டன் புதுப்பித்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்  படும். 

பொது இடங்கள் மற்றும் சுற்றுலா மேம்பாடு 

வைகை கரை சாலை, தெப்பக்குளம் பகுதி ஆகிய இடங்களில் சைக்கிள் டிராக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

குடிநீர் வழங்கல் 

அம்ருத் திட்டத்தின் நான்காவது சிப்பத்தில் ரூ.257.60 கோடி மதிப்பீட்டில் வார்டுகள் 1 முதல் 9, 11, 13, 17, 19, 20, 36 முதல் 41, 84, 87, 89 முதல் 100 ஆகிய 34 வார்டுகளில் (முழுமையாகவோ அல்லது பகுதி அளவிலோ) புதிய குடிநீர் பைப்பு கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் ஜூன் 2023-ல் நிறைவடையும். அம்ருத் திட்டத்தின் ஐந்தாவது சிப்பதிற்கு டெண்டர் விடப்பட்டு பரிசீலனையில் உள்ளது. இத்திட்டத்தில் ரூ.357,45 கோடி மதிப்பீட்டில் வார்டு கள் 14,15, 22 முதல் 35 வரை, 43, 44, 45, 57, 58, 62 முதல் 75 வரை, 77, 80 முதல் 83 வரை, 88 ஆகிய 41 வார்டுகளில் முழுமையாகவும் 5, 6, 8 முதல் 13, 16, 17, 18, 21, 37, 38, 39, 42, 46, 47, 49, 53, 56, 78, 79, 86, 87, 89, 90, 91, 99 ஆகிய 29 வார்டுகளில் பகுதி அளவிலும் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும். இத்திட்டம் வரும் ஜூன் மாதத்தில் துவக்கப்பட்டு அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் நிறைவடையும்.  தேனி மாவட்டம் பெரியாறு லோயர் கேம்ப்  பகுதியில் இருந்து அம்ருத் திட்டத்தில் குடிநீர் குழாய்கள் மற்றும் புதிய சுத்திகரிப்பு நிலையம் ஆகியவையும் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நிறைவடையும். இப்பணிகள் முழுமையாக முடிவடைந்து சோதனை ஓட்டம் செய்யப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தபிறகு மதுரையில் முழுமையான குடிநீர் விநியோக கட்டமைப்பு செயல்பாட்டில் இருக்கும். அனைத்து வார்டுகளி லும் தடையின்றி சுத்தமான குடிநீர் வழங்கிட வழி வகை ஏற்படும். 

கழிவு நீர் மேலாண்மை 

மாநகராட்சி கழிவுநீரேற்று நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பணியா ளர்கள் கட்டாயம் தகுந்த பாதுகாப்பு உபகர ணங்களுடன் பணிபுரிவது முழுமையாக உறுதி செய்யப்படும்.  கற்பகம் நகர் கழிவுநீரேற்று மையத்தில் கிணறு பராமரிப்புக்கென மதுரை மாநகராட்சியால் பிரத்தி யேகமாக புதிய தொழில்நுட்பத்தில் வடிவ மைக்கப்பட்ட நவீன தனியங்கி இயந்திரம் (Madurai Crane) அமைக்கப்படும். இதன் செயல்பாட்டைப் பொறுத்து பிற கிணறுகளிலும் இதனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  பாதாள சாக்கடை பிரச்சனைகள் அதிகம்  வரும் இடங்கள் மாநகராட்சியால் கண்டறியப் பட்டுள்ளன. UNNURM திட்டத்திற்கு வழங்கப் பட்டு, செலவழிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த நிதி கண்டறியப்பட்டு, அந்த பகுதிகளில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் கடந்த ஆண்டில்  துவங்கப்பட்டுள்ளன. மேலும், பிற பகுதிகளிலும் தேவைக்கு எற்ப சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்  படும்.

மருத்துவம் 

மாநகரின் பொது சுகாதார கட்டமைப்பை மேம்  படுத்தும் வகையில் அன்சாரி நகர், சாத்தமங்கலம் மற்றும் திருநகர் ஆகிய இடங்களில் பொது சுகா தார ஆய்வகங்கள் ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகின்றன. அவனியாபுரத்தில் புதிய ஆரம்ப சுகாதார  நிலையம் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. வில்லாபுரம் சுகாதார நிலையம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய்யப்பட்டு வருகிறது.  அருள்தாஸ்புரம், திடீர் நகர், சிந்தாமணி, நரிமேடு, சாத்தமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் மராமத்து மற்றும் விரிவாக்கப் பணி கள் மேற்கொள்ளப்படும்.  ஆனையூர் சுகாதார நிலையத்துக்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும்.  15 வது நிதிக்குழு மானியத்தில் சித்திரை வீதி உட்பட 62 இடங்களில் ரூ.15.5 கோடி மதிப்பீட்டில் புதிய நல மையங்கள் அமைக்கப்படும்.

பொது சுகாதாரம் மற்றும்  திடக்கழிவு மேலாண்மை 

கடந்த ஓராண்டில் நகரின் தூய்மைப்பணி பெரு மளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தினமும் 500-600 டன் என்ற அளவில் இருந்து 750– 850 டன் என்ற அளவில் குப்பைகள் அகற்றப்படுகிறது. மேலும், 51 வார்டுகளில் முழுமையாக விடுவீடாக குப்பையை தரம் பிரித்து பெற்று மக்கும் குப்பை யை உரமாக்கும் பணிகள் முழுமையாக செயல்  படுத்தப்பட உள்ளது. இது இன்னும் 15 மாதங்க ளில் அனைத்து வார்டுகளுக்கும் முழுமையாக விரிவுபடுத்தப்படும்.  வைகை நதியை தூய்மையாக பராமரிப்பதை  உறுதி செய்திட, பொதுமக்கள், தன்னார்வலர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்களிப்புடன் தொடர் தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வுப் பணிகள் வரும் ஜூன் மாதம் முதல் மேற்கொள்ளப்படும்.  குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் மதுரை வெள்ளக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் 200 மெட்ரிக் டன் அள வில் செயல்படுத்த அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.  வெள்ளக்கல் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் தனியார் பங்களிப்புடன் குப்பையில் இருந்து உயிரி எரிவாயு உற்பத்தி செய்திடும் மையம் அமைக்கப்படும். இங்கு நகரின் பல இடங்களில் சாலையில் அற்றித்திரியும் கால்நடைகளுக்கென  பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு, அதில் கிடைக்கபெறும் கால்நடைக் கழிவுகள், நகரில் பெறப்படும் மக்கும் குப்பைகள், அவனியாபுரம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பெறப்படும் திடக்கழிவு ஆகியவற்றைக் கொண்டு ஒரு நாளைக்கு 50 டன் வரை உயிரி எரிவாயு தயாரிக்கப்படும். சுமார் ரூ.9 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டம், மாநகராட்சிக்கு நேரடி செலவினம் ஏதுமின்றி ராயல்டி அடிப்படையில் தனியார் பங்க ளிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. 

நகரின் முக்கிய இடங்களில் அமைக்கும் அனைத்து பொது கழிப்பிடங்களும் மாற்றுத்திற னாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஆகி யோருக்கான தனித்தனி கழிப்பறைகள் உள்ள வாறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாட்டுத் தாவணி மீன் மார்கெட், தமுக்கம் ஆகிய இடங்களில் புதிய பொது கழிப்பிடங்கள் அமைக்கப்படும். மேலும் திடீர் நகர், மேலதோப்பு 11 உள்ளிட்ட இடங்களில் உள்ள பொது கழிப்பிடங்கள் புதுப்பிக்  கப்படும். இத்திட்டத்தில் மாமன்ற உறுப்பி னர்கள் பரிந்துரை செய்திடும் பிற பொது கழிப்பி டங்களையும் புதுப்பித்திட நடவடிக்கை எடுக்கப் படும்.  பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சி அம்மன் திருக்கோவில், திருப்பரங்குன்றம் திருக்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி கழிப்பி டங்கள் இலவச கழிப்பிடங்களாக மாற்றப்பட்டுள் ளன. அதே போல மாட்டுத்தாவணி, ஆரப்பாளை யம் பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பி டங்களையும் அவற்றின் டெண்டர் காலம் முடிந்த வுடன் இலவசக் கழிப்பிடங்களாக மாற்றிட நட வடிக்கை எடுக்கப்படும். 

 கால்நடைகள் 

நாய்களுக்கான ரேபீஸ் தடுப்பூசி திட்டம் மற்றும் கருத்தடைத் திட்டம் ஆகியன மதுரை  மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கருத்தடைத் திட்டத்தை நல்ல முறையில் செயல் படுத்தும் பொருட்டு, அறுவை அரங்குகள் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள. விலங்குகள் நல வாரிய அங்கீகாரம் பெற்ற அமைப்பு ஒன்று மட்டுமே மதுரை யில் உள்ளதால், அதிக எண்ணிக்கையில் கருத் தடை அறுவை சிகிச்சை செய்திட இயலாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு கண்டு அதிக எண்ணிக்கை யில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள நட வடிக்கை எடுக்கப்படும். 

மயானங்கள் 

தமிழ்நாடு அரசின் மானியத்தின் மூலம் ஆனையூர், நாகனாகுளம் ஆகிய இடங்களில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன எரிவாயு தகன  மேடைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.  தத்தனேரியில் செயல்பட்டு வரும் 2 யூனிட்டு களுடன் கோவிட் கால தேவைகாக நிறுவப்பட்டு முழுமையாக செயல்படுத்தப்படாமல் உள்ள மூன்றாவது யூனிட் தேவையான வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

சாலைகள் 

அரசின் நிதியுதவியுடன் ரூ.110 கோடி மதிப்பீட்டில் 210 கி.மீ சாலைகள் அமைக்கும் பணி  நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் அண்ணா  பல்கலைக்கழகம் மற்றும் தியாகராஜா பொறி யியல் கல்லூரி ஆகியவற்றின் மூலம் தர ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. சேதமடைந்துள்ள சாலை ரவுண்டாணாக்களை புதுப்பிக்கவும், அவற்றை மதுரை நகரின் சூழ லுக்கு ஏற்ற செடிகளை நட்டு பசுமையான இடங்க ளாக பராமரிக்கவும் “ பசுமை சந்திப்புகள் “(Green Junction ) திட்டம் செயல்படுத்தப்படும். 

பேருந்து நிலையங்கள் 

அரசு சிறப்பு நிதி உதவியுடன் மாட்டுத்தாவணி புறநகர் மற்றும் ஆம்னி பேருந்து நிலையங்களை யும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தையும் புதுப்பிக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்திற்குள் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அண்ணா பேருந்து நிலையம் மற்றும் ஆனையூர் பேருந்து நிலையத்தை கூடுதல் வசதி களுடன் புதுப்பிப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். 

தெருவிளக்குகள் 

அரசின் நிதியுதவியில் Kfw வங்கி நிதியுதவி திட்டத்தில் ரூ.5.2 கோடி மதிபீட்டில் தெருவிளக்கு கள் இல்லாத பகுதிகளில் புதிய தெருவிளக்குகள் அமைக்க அரசுக்கு முன்மொழிவு அனுப்பப் பட்டுள்ளது. இத்திட்டத்தில் சிறப்பு நிதி கோரிப் பெற்று வைகை கரை சாலை, இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 15 தேவையான இடங்கள் மற்றும் பிற இடங்களில் புதிய தெருவிளக்குகள் அமைக்கப்படும். 

அங்காடிகள் 

நடப்பு ஆண்டில் சுப்பிரமணியபுரம் மார்க்கெட் ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலும், தயிர் மார்க்கெட் ரூ.70 லட்சம் மதிப்பீட்டிலும் புதுப்பிக்க அரசின் நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். 

வார்டு மூலதன பணிகள் நிதி 

மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை பரிசீலித்து, அனைத்து வார்டுகளிலும் நிறை வேற்றப்படும் பல்வேறு திட்ப்பணிகளுடன் கூடு தலாக, மாமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் மூலதன பணிகளை அந்தந்த வார்டுகளில் மேற்கொள்ள ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.3 லட்சம் சிறப்பு நிதி இந்த ஆண்டில் வழங்கப்படுகிறது. 

மண்டலங்களுக்கான அவசரகால செலவின நிதி 

பேரிடர் குழாய் உடைப்பு, பாதாள சாக்கடை  பாதிப்புகள், கட்டிடங்கள் சேதம், மோட்டார்கள் பழுதுபார்த்தல், தெருவிளக்கு பராமரிப்பு, தூய்மைப்பணி மற்றும் பொறியியல் பணிக ளுக்கான உபகரணங்கள், சிமென்ட் உள்ளிட்ட வற்றின் அவசர சிறு கொள்முதல் போன்ற அவ சரப் பணிகளுக்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் மாதத்திற்கு ரூ.2 லட்சம் வரையில், ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.24 லட்சம் சிறப்பு நிதி வழங் கப்படும். இந்த நிதி ஆண்டின் செலவினங்களில் ரூ.332.52 கோடி பணியாளர் மற்றும் நிர்வாக செலவின மாகவும், ரூ.795.35 கோடி மூலதன் செலவின மாகவும், ரூ.122.43 கோடி இயக்கம் மற்றும் பரா மரிப்பு செலவினமாகவும், ரூ.1.47 கோடி வட்டி மற்றும் நிதி செலவினமாகவும் என மொத்த செல வினம் ரூ.1,251.77 கோடியாக இருக்கும்.