தேனி, ஏப்.18- அங்கன்வாடி மையங்களை இணைக் கும் திட்டத்தை கைவிட அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சாந்தியம்மாள் தலைமை வகித்தார்.அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தாஜுதீன் துவக்கி வைத்து பேசினார் .சிஐடியு தேனி மாவட்ட தலைவர் டி.ஜெயபாண்டி ,அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்தி ரன் ஆகியோர் ஆதரித்து பேசினர் .மாநில நிர்வாகி நாகலட்சுமி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார் . இதில் ஊட்டச்சத்து மேம்படுத்துதல் என்ற பெயரில் குழந்தைகள் வருகை பதிவு கணக்கின்படி அங்கன்வாடிமையங்களை இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும், அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 10 ஆண்டுகள் பணியை நிறைவு செய்த, எஸ்.எஸ்.எஸ்.சி., தேர்ச்சி பெற்ற அங்கன் வாடி உதவியாளருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட் டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.எஸ்தர் ராணி தலைமையேற்றார். மாவட்ட செய லாளர் வி.பாண்டியம்மாள், மாவட்ட பொரு ளாளர் பி.பூங்கொடி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சத்யா ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர். போராட் டத்தை ஆதரித்து சிஐடியு மாவட்ட நிர்வாகி கள் எம்.சாராள், பி.ராமர் ஆகியோர் பேசி னர். முடிவில் சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமான அங்கன்வாடி ஊழி யர்கள் பங்கேற்றனர்.
மதுரை
மாவட்டத் தலைவர் பா.இராஜேஸ்வரி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் வி. சாந்தி முன்னிலை வகித்தார். மாவட்டச் அ .வரதலட்சுமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர். தெய்வராஜ், மாவட்டச் செயலாளர் இரா. லெனின் ஆகியோர் ஆதரித்துப் பேசி னர். சங்கத்தின் மாவட்ட பொருளார் பா. இரமேஸ்வரி, சிஐடியு மாவட்டப் பொருளா ளர் ஜே. லூர்துரூபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . திண்டுக்கல் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் செல்வதனபாக்கியம் தலைமை வகித்தார் மாவட்டச்செயலாளர் பத்மாவதி முன்னிலை வகித்தார். மாநி லத்தலைவர் ரத்தினமாலா, சிஐடியு மாவட்டச்செயலாளர் கே.பிரபாகரன், அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் எஸ்.முபாரக்அலி ஆகியோர் பேசினர். மாவட்டப் பொருளாளர் தமிழ்செல்வி மற்றும் பலர் பங்கேற்றனர். (நநி)