districts

img

போலி ஆவணம் தயாரித்து மோசடி ஆண்டிபட்டி துணை வட்டாட்சியர் கைது

தேனி, டிச.5- தேனியில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதாக ஆண்டிபட்டி மண் டல துணை வட்டாட்சியரை வெள்ளிக்கிழமை, மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை யினர் கைது செய்தனர். தேனி அருகே ஊஞ்சாம்பட்டி, அனுகிரகா நகைர் சேர்ந்தவர் சந்திரசேகரன். சங்காரபுரத்தில் உள்ள இவரது நிலத்தை கிரை யம் பெறுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு பெரியகுளத்தைச் சேர்ந்த சந்தனபாண்டியன் என்ப வர் ரூ.1 லட்சம் முன்பணமாக கொடுத்திருந்தார். பின்னர், ஒப்பந்தப்படி உரிய காலத்தில் நிலத்தை கிரையம் செய்யாமல் சந்தனபாண்டியன் முன் பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் துணை வட்டாட்சியராக பணியாற்றிய மணவாளன் என்ப வரிடம், சந்திரசேகரனின் நிலத்தை கிரையம் பெறுவதற் காக சந்தனபாண்டியன் ரூ.1.50 கோடி கொடுத்ததாகவும்,

இதற்கு ஒப்புதல் தெரிவித்து சந்திரசேகரன் கையெழுத்திட்டு கொடுத்த ஆவணத்தை மண வாளன் தன்னிடம் கொடுத்தி ருப்பாகவும் தெரிவித்து, ஆவ ணம் ஒன்றை சந்தனபாண்டியன் சந்திரசேகரினிடம் கொடுத்துள்ளார். இந்த ஆவணம் போலியா னது என்றும், நிலத்தை கிரையம் செய்து கொடுப்பதற்காக மண வாளனிடம் தான் பணம் வாங்க வில்லை என்றும், சந்தனபாண்டி யன், மணவாளன் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து தனது நிலத்தை அபகரிக்க முயல்வதாக வும் கடந்த 2020, மே மாதம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் சந்திரசேகரன் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது காவல் துறையினர் வழக்கு பதிந்து, சந்தனபாண்டியனை கைது செய்தனர். இந்த நிலையில், இவ்வழக்கில் தற்போது ஆண்டி பட்டி மண்டல துணை வட்டாட்சி யராக பணியாற்றி வரும் மண வாளனை காவல்துறையினர் கைது செய்தனர்.