districts

img

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

சாத்தூர், ஏப்.7- சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தினால் அங்கிருந்த 3 அறைகள் தரைமட்டமாகின. சிவகாசியை சேர்ந்த மாரியப்பன் என்ப வருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூர் அருகே  ஒத்தையால் பகுதியில் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பட்டாசு ஆலையின் உரிமம் காலாவதி ஆகிவிட்டதால் அதனை புதுப்பிக்க பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெறவில்லை. ஒரு அறையில் மட்டும் பட்டாசுகள் தயா ரிக்கத் தேவையான  வேதிப் பொருளான சல்பர் அதிகளவில்  வைக்கப்பட்டு இருந்த தாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகு தியில் திடீரென மழை பெய்துள்ளது. அப்போது, வேதிப் பொருள் இருந்த அறைக்குள்  மழைநீர்   புகுந்ததால் வியாழ னன்று இரவு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமானது.   தகவலறிந்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத்  துறையினர், மேலும் தீயை பரவ விடாமல் கட்டுக்குள் கொண்டு வந்த னர். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து நடந்த போது ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.