districts

img

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

பள்ளிபாளையம், ஜன.28- நாமக்கல் மற்றும் திருச்செங் கோட்டில் நடைபெற்ற, அரசு நலத் திட்ட உதவி வழங்கும் விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டு திறன் அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். நாமக்கல், பொம்மை குட்டை  மேடு பகுதியில் அரசு நலத்திட்ட  உதவி வழங்கும் விழா நடை பெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  ஸ்ரேயா பி.சிங் தலைமை யில் நடைபெற்ற நிகழ்விற்கு வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் முன் னிலை வகித்தார். தமிழ்நாடு  இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் நிகழ்வில் கலந்து  கொண்டு, ஒரு லட்சத்துக்கும் மேற் ்பட்ட பயனாளிகளுக்கு ரூ.303.36  கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி களை வழங்கினார். இதில், ரூ.351  கோடியே 11 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்ட பணி களை துவக்கி வைத்தும், ரூ.23 கோடியே 70 லட்சம் மதிப்பிலான முடி வுற்ற பணிகளை திறந்து வைத்து,  மொத்தம் ரூ.628.17 கோடி மதிப்பி லான நலத்திட்ட உதவிகளை வழங் கினார்.  

இந்நிகழ்வில் பங்கேற்ற உதய நிதி ஸ்டாலின் பேசுகையில், நாமக்கல் மாவட்டம் உழைக்கும் மக்களை அதிகமாக கொண்ட மாவட்டம்.இந்தியாவிலேயே முட்டை உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழக அளவில் மொத்தம்  60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி களைக் கொண்டு, சாலை போக்கு வரத்தில் முதலிடம் பெற்றுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற 18  மாதங்களில், மக்களுக்கு அளித்த  பெரும்பான்மையான வாக்குறுதி யை நிறைவேற்றி உள்ளோம். பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இது வரை 216 கோடி பெண்கள் பயணம்  செய்துள்ளனர். மக்களை தேடி மருத் துவம் திட்டத்தின் கீழ் பொது மக்களின், வீடுகளுக்கு நேரடியாக சென்று, ஒரு கோடிக்கு மேலான  மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட் டுள்ளன.  புதுமைப்பெண் திட்டம், 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, நாமக்கல் நகருக்கு புதிய பேருந்து நிலையம் என பதவி யேற்ற கடந்த 18 மாதங்களில் பல் வேறு சாதனைகளை புரிந்துள்ள திமுக அரசு, மேலும் பல்வேறு நலப்  திட்ட உதவிகளை செயல்படுத்த உள்ளது. அதற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்வில்,  ஏராளமனோர் கலந்து கொண்டனர்.