districts

img

பழனியில் நகராட்சி சார்பில் புகையில்லா போகி என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி

பழனியில் நகராட்சி சார்பில் புகையில்லா போகி என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  பொதுமக்கள் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதால் சுற்றுப்புறச் சூழல் மற்றும் மாசு ஏற்பட்டு சுகாதாரசீர்கேடு ஏற்படும். எனவே குப்பைகளை எரிக்கவேண்டாம் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் நகர்மன்றத்தலைவர் உமாமகேஸ்வரி, ஆணையர் கமலா ,நகர்மன்ற துணைத் தலைவர் கந்தசாமி   மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள்   பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.