விருதுநகர், மார்ச் 10- விருதுநகரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் மாநில அளவில் நடனம், நாடகம், இசைக் கருவி வாசித்தல், கட்டுரை எழுதுதல், விவாத மேடை பட்டிமன்றம், மொழித் திறன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுடனான “காபி வித் கலெக்டர்“நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 11 ஒன்றியங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அப்போது ஆட்சியர், மாணவ, மாணவி களின் லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பதை கேட்ட றிந்தார். இதையடுத்து, மாணவர்களும் தங்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், விண் வெளி வீரர், வழக்கறிஞர், வானவியல், இராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறை களில் படிப்பதற்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்தனர். அதன் பிறகு, பள்ளி பருவத்திலேயே தங்களுக்கான தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிர் காலத்தில் எந்தவொரு பணியில் இருந்தா லும், அந்த தனித்திறமைகளை வாழ்நாள் முழுவதும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டும். உழைப்பி னால் முடியாதது ஒன்றுமில்லை. அவ்வாறு செய்தால் வாழ்வில் நிச்சயம் முன்னேற லாம் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.