இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை டிசம்பர் 31 அன்று காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதன்பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் பக்தர்களுக்கு மதிய உணவை பரிமாறினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் மாரியப்பன், இராமேஸ்வரம் நகர் மன்றத்தலைவர் நாசர்ஷான் , இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், கோவில் தர்க்கார் பழனிக்குமார், நகராட்சி ஆணையர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.