மதுரை, மார்ச் 7- இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிரா மத்தில் கிடைக்கப்பெற்ற அகழாய்வு பொருட்க ளைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க நிலம் ஒதுக்கி, தொல்லியல் துறை வசம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “இராமநாதபுரம் மாவட்டத்தி லுள்ள அழகன்குளம் கிராமம் வைகை ஆறும், வங்காள விரிகுடா கடலும் சங்கமிக்கும் இடமாக அமைந்துள்ளது. சங்க காலங்களில் அழகன்குளம் கிராமம் கடல் வழி வணிக செயல்பாட்டிற்கு பயன் படுத்தப்பட்டுள்ளது. அழகன்குளம் கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் பல பழமையான பொருள்கள் கிடைக்கப்பட்டுள்ளன. இங்கு தமிழ் பிராமிய எழுத்துக்கள், மணிகள், சோழ நாண யங்கள், ரோமன் உடனான வணிகம் ஆகியவற் றிற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அழகன் குளம் கிராமத்தில் 1980-1987, 1990-1991, 1993-1994, 1995-1996, 1997-1998, 2014-2015, 2017 என பல முறை அகழாய்வு நடைபெற்றுள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற அகழாய்வு பொருட்களை வயதை கண்டுபிடிக்கக்கூடிய கார்பன் முறை மூலம் சோதனை செய்ததில் கிமு 345, கிமு 268, கிமு 232 வருடங்களுக்கு முன்பு உள்ளது என தெரிய வரு கிறது. அழகன்குளம் கிராமத்தை அகழாய்வு செய்ததன் மூலம் 4 விதமான நூற்றாண்டுகளில் மக்கள் வாழ்ந்ததற்கான பொருள்கள் கிடைக் கப்பட்டுள்ளன.
எனவே, அழகன்குளம் கிராமத்தில் கிடைக்கப்பெற்ற அகழாய்வு பொருள்களைக் கொண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் அருங்காட்சி யகம் அமைக்கவும், 1980-1987, 1990-1991, 1993- 1994, 1995-1996, 1997-1998, 2014-2015, 2017 ஆகிய காலங்களில் அழகன்குளம் கிராமத்தில் நடைபெற்ற அகழாய்வு குறித்த இறுதி அறிக்கையை வெளி யிடவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.” என்று கோரியிருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு முன்பு செவ்வாயன்று நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் , 2015 - 16 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் அறிக்கை தயார் செய்யப்பட்டு நிபுணர்களின் ஒப்புத லுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அழகன் குளம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வா ராய்ச்சியின் இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும். 2016-17 ஆண்டுகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 13974 பொருட்கள் கண்டெ டுக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் அருங்காட்சி யகம் அமைப்பது தொடர்பாக இடம் ஒதுக்கப்பட்டு வருவாய் துறையிடமிருந்து தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கான நட வடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கை பிப்ரவரி 14-க்கு ஒத்திவைத்தனர்.