ஒன்றிய அரசின் 2023-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் கடுமையாக குறைக்கப்பட்டதை கண்டித்து திருநெல்வேலியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பெருமாள், மாவட்டச் செயலாளர் முத்துமணிகண்டன், இசக்கிமுத்து, அகஸ்திய ராஜன், சங்கரசுப்பு ,மாரியம்மாள், மாலதி, குணசேகரன், கண்மணி, மகாராஜன், பேச்சிமுத்து, ஐகோர்ட் ராஜா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கேஜி.பாஸ்கரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.