districts

மதுரையில் பழங்குடியினருக்கு தனிவார்டு ஒதுக்கிடுக! தேர்தல் ஆணையாளருக்கு சிபிஎம் கடிதம்

 மதுரை, ஜன.27- நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் குறிப்பாக மதுரை மாநகராட்சி தேர்தலில் (வார்டுகள்) தொகுதி ஒதுக்கீடு பட்டியலில் பழங்குடியினருக்கான வார்டுகள் ஒதுக்கீடு என்பது மொத்தமுள்ள 100 வார்டுகளில் ஒரு வார்டு கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மதுரை மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட (மதுரை மாநகராட்சி ஆணையாளரும் கலந்து கொண்ட) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்திலும் இதுகுறித்து ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தை பதிவு செய்துள்ளோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். மதுரை ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் . இதுகுறித்து மறு பரிசீலனை செய்து பழங்குடியினருக்கான தனி வார்டுகள் ஒதுக்கீடு செய்திட பரிந்துரை (மாநில தேர்தல் ஆணையத்திற்கு) செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

;