தூத்துக்குடி, ஏப்.5- தூத்துக்குடி வஉசி துறை முகத்தில் மத்திய அரசை கண் டித்து அனைத்து தொழிற்சங் கம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சட்ட விரோதமாக பிடித் தம் செய்த பஞ்சப்படியை திரும்ப கொடுக்க வேண்டும், துறைமுகங்களில் பணி செய்யும் ஒப்பந்த தொழிலா ளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், கப்பல் துறை அமைச்சகம் துறை முக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உட னடியாக துவக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தியும், துறைமுக சொத்துக்களை தனியாருக்கு விற்க துடிக்கும் மத்திய அரசை கண்டித்தும், துறைமுக நிர்வாக அலுவல கம் முன்பு அனைத்து தொழிற் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துறைமுக ஜன நாயக ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் ரசல், ஈஸ்வரமூர்த்தி, காசி, மீனாட்சி சுந்தரேசன், ஜெயலட்சுமி, போர்ட் எம்பி ளாயீஸ் டிரேட் யூனியன் ஐஎன்டியுசி சார்பில் சங்கர லிங்கம், பரமசிவன், நேஷ னல் ஹார்பர் ஒர்க்கர்ஸ் யூனி யன் ஐஎன்டியூசி சார்பில் பி. கதிர்வேல், ராஜகோபாலன், சந்திரசேகரன், போர்ட் மெரைனர் ஸ் அன்ட் ஜென ரல் ஸ்டாப் யூனியன் ஹெச்எம்எஸ் சார்பில் சத்யா, சுரேஷ், . யுனைடெட் ஜென ரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார் பில் ஜான் கென்னடி கிளிண் டன், துறைமுக அண்ணா டாக் அன்ட் டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் சண்முககுமாரி முருகேசன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.