districts

img

விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் பிரச்சாரம்

விருதுநகர், ஆக.1- ஒன்றிய பாஜக அரசா னது விலைவாசி உயர்வை  கட்டுப்படுத்த வேண்டும். அர சுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்தல் கூடாது. அரசுத் துறைகளில் காண்ட் ராக்ட், ஒப்பந்தமுறை மற் றும் தினக் கூலி முறையை கைவிட வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்  கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பிரச்  சார இயக்கம் நடைபெற்றது. விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு எல்.பி.எப்  மாவட்ட பொதுச் செயலா ளர் ராஜசெல்வம் தலைமை யேற்றார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி. வேலுச்சாமி, ஏஐடியுசி சார் பில் பாண்டியன், எல்.பி.எப்  மாவட்டத் தலைவர் மாடசாமி  ஆகியோர் விளக்கிப் பேசி னர். மேலும் இதில் சிஐடியு  நிர்வாகிகள் ஆர்.பாலசுப்பிர மணியன், எம்.கார்மேகம்,  பி.ராமர், எம்.வெள்ளைத் துரை, எம்.சாராள் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.